Skip to main content

"போராடி பெற்ற சுதந்திரத்தைக் காக்கவும் போராட்டம் தேவை"! -ஆர்.நல்லக்கண்ணு பேச்சு

Published on 26/12/2020 | Edited on 26/12/2020

 

சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லக்கண்ணுவின் 96- வது பிறந்த நாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 

 

சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்த நல்லக்கண்ணுவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், முத்தரசன், தா.பாண்டியன், திருமாவளன் எம்.பி. உள்ளிட்டோர் நேரில் வாழ்த்துத் தெரிவித்தனர். அதேபோல், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். 

 

விழாவில் பேசிய நல்லக்கண்ணு, "போராடி பெற்ற சுதந்திரத்தைக் பாதுகாக்கவும் போராட்டம் தேவைப்படுகிறது. அரசியல் சட்டத்திற்கு தற்போது ஆபத்து வந்திருக்கிறது; அது பாதுகாக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது" என்றார்.

 

சார்ந்த செய்திகள்