Skip to main content

ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கல்லூரி மாணவர் சடலம்! கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை

Published on 09/02/2019 | Edited on 09/02/2019

சேலம் அருகே, ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கல்லூரி மாணவர் சடலம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

 

 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முத்தம்பட்டி பகுதியில், சேலம் - விருத்தாசலம் ரயில் மார்க்கத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபரின் சடலம் கிடப்பது குறித்து பொதுமக்கள் வாழப்பாடி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

 

 College student body collapsed Murder? Suicide? Police investigation

 

சம்பவ இடம் விரைந்த வாழப்பாடி காவல்துறையினர், இதுகுறித்து ரயில்வே காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதைத் தொடர்ந்து ரயில்வே காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

 

வாலிபரின் சடலம் அருகே ஒரு அடையாள அட்டை கிடந்தது. அதில், வாழப்பாடி அருகே உள்ள சிங்கிபுரம் கிழக்கு சாலையைச் சேர்ந்த அசோகன் மகன் குகன்ராஜ் (20) என்று இருந்தது. ராசிபுரம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ., (மெக்கானிக்) படித்து வந்திருப்பதும் தெரியவந்தது.  

 

 College student body collapsed Murder? Suicide? Police investigation

 

இது ஒருபுறம் இருக்க, பிப்ரவரி 7ம் தேதி இரவு, வாழப்பாடி காவல்நிலையத்தில் அசோகன் என்பவர் ஒரு புகார் அளித்திருந்தார். அதில், கல்லூரிக்குச் சென்ற தன் மகன் இரவு வீடு திரும்பவில்லை என்று கூறியிருந்தார். புகார் அளித்த அசோகனின் மகன்தான் குகன்ராஜ் என்பதை அறிய காவல்துறையினர், அசோகனுக்கு தகவல் அளித்து சடலத்தை அடையாளம் காட்டுமாறு கூறினர். அசோகன், சடலத்தைப் பார்த்து மகனே என்று கதறி அழுதார். 

 

 

இதுகுறித்து குகன்ராஜின் உறவினர்கள் கூறுகையில், ''குகன்ராஜை யாரோ திட்டமிட்டு கொலை செய்துவிட்டு, சடலத்தை ரயில் தண்டவாளத்தில் வீசியெறிந்துள்ளனர். அவன் நல்ல பையன். யாருடைய வம்புதும்புக்கும் போக மாட்டான். இதுகுறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும்,'' என்றனர்.

 

 

காதல் விவகாரத்தில் குகன்ராஜ் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் விவகாரத்தில் சிக்கி, அவரே ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

 

 

இதற்கிடையே, குகன்ராஜ் கல்லூரிக்கு வழக்கமாக தன்னுடன் படிக்கும் நண்பர்களுடன் கல்லூரி பேருந்தில் சென்று வந்துள்ளார். கல்லூரி முடிந்து அதே பேருந்தில் வீடு திரும்பும் அவர், பிப்ரவரி 7ம் தேதியன்று மாலை வழக்கமாக இறங்கும் சிங்கிபுரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்காமல் வாழப்பாடிக்குச் சென்று இறங்கியிருப்பது தெரிய வந்தது. வழக்கமான நிறுத்தத்தில் இறங்காதது குறித்து நண்பர்கள் கேட்டதற்கு, தன்னுடைய புத்தக பை கிழிந்து இருப்பதாகவும், அதை வாழப்பாடிக்குச் சென்று தைத்துவிட்டு வருவதாகவும் கூறியதாகவும் குகன்ராஜின் நண்பர்கள் கூறுகின்றனர்.

 

 

தலை வேறு, முண்டம் வேறாக வாலிபர் சடலம் கிடந்த சம்பவம் சிங்கிபுரம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

“40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்” - மா.செ. ராஜேந்திரன் நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.சேலம் நாடாளுமன்றத் தொகுதியைப் பொருத்தவரை திமுக சார்பில் சேலம் மேற்கு மா.செ.,டி.எம்.செல்வகணபதி போட்டியிடுகிறார். எம்எல்ஏவும், மத்திய மா.செ.வுமான ராஜேந்திரன், சேலம் சி.எஸ்.ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் அவருடையமனைவி, மகளுடன் வந்து வாக்களித்தார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழக அரசின் சாதனைத் திட்டங்களான விடியல் பேருந்து பயணத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன்திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களே திமுக கூட்டணிக்கு வெற்றியைத் தேடித்தரும். பெண்களை முன்னிறுத்தி தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்குஆதரவு தரும் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.  இந்த தேர்தலில் நிச்சயமாக தமிழகம்,புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். அதிமுகவுக்கு இரண்டாம்கிடைக்க வாய்ப்பு உள்ளது,'' என்றார்.

Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

திமுக நிர்வாகிகள் ஷா நவாஸ், கே.டி.மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இது ஒருபுறம் இருக்க, சேலம் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, சேலம் சாரதாபாலமந்திர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வாக்களித்தார். பின்னர் அவர் கூறுகையில், ''திமுக ஆட்சியின் நலத்திட்டங்கள்தான் இந்த தேர்தலில் கதாநாயகன். பெண்களுக்கான பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதால் அவர்களின் ஆதரவு திமுகவுக்குகிடைத்துள்ளது. நாடும் நமதே; நாற்பதும் நமதே,'' என்றார்.

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.