Skip to main content

பாஜகவில் இணைந்ததால் அண்ணன் மகனையே கொலை செய்த சித்தப்பா!

Published on 29/05/2019 | Edited on 29/05/2019


கோயம்புத்தூரை சேர்ந்த விஜயக்குமார் என்பவர் ஒரு மாநில கட்சியில் நிர்வாகியாக செயல்பட்டு வந்துள்ளார். அவர் தனது அண்ணன் மகனான சந்தோஷ்குமார் என்பவரையும் அந்த கட்சியில் சேர்த்து விட்டுள்ளார். கட்சி பணிகளில் ஆர்வம் காட்டிய சந்தோஷ்குமார் நாளடைவில் அந்த கட்சியின் மாவட்ட செயலாளராக உயர்ந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தனது ஆதரவாளர்களுடன் சந்தோஷ்குமார் பாஜக கட்சிக்கு மாறிவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது சித்தப்பா விஜயக்குமார் சந்தோஷ்குமாரிடம் அடிக்கடி சண்டையில் ஈடுபட்டுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கட்சி அபார வெற்றி பெற்றது.

 

 

arrested

 

 

அதன்  பிறகு 26 ஆம்  தேதியன்று பைக்கில் சென்று கொண்டிருந்த சந்தோஷ்குமாரை அவரது சித்தப்பா விஜயக்குமார் தனது ஆதரவாளர்களோடு சென்று கத்தியால் குத்தி கொன்று விட்டு தப்பி விட்டார். இந்த கொலை தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்திய போது விஜயக்குமார் மீது காவல் துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் விஜயகுமாரை விசாரிக்க திட்டமிட்டனர். ஆனால் அதற்குள் அவர் தலைமறைவு ஆகிவிட்டார். அவரை தேடி பிடிக்க  காவல்துறை தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த செய்தியை அறிந்த விஜயக்குமார் கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் தனது குடும்பத்தினருடன் சரணடைந்தார். கட்சி மாறியதற்காக தனது சொந்த அண்ணன் மகனையே விஜயக்குமார் கொன்றது. அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்