Skip to main content

அத்தி பூத்தாற்போல காவல்துறையில் ஒரு ஆய்வாளர்! -அசத்தும் அம்பேத்கர்!

Published on 31/01/2019 | Edited on 31/01/2019


அத்தி மரத்தில் பூ பூப்பது கண்ணுக்குத் தெரியாமல் நிகழுமாம். அதனாலேயே, காணக்கிடைக்காததைக் கண்டால் ‘அத்தி பூத்தாற்போல’ என்பார்கள். காவல்துறை ஆய்வாளர் அம்பேத்கருக்கு இந்த சொலவடை நூற்றுக்கு நூறு பொருந்தும்.

ஆய்வாளர் அம்பேத்கர் அடிக்கடி இப்படி சொல்வார் –

‘மக்களுக்கு நன்மை கிடைக்கும்னா எந்த லெவலுக்கும் இறங்கி வேலை பார்ப்போம்!’

பேச்சில் மட்டுமல்ல, நற்செயலிலும் அவர் முனைப்புடன் இறங்குவதால், பொது மக்களின் நன்மதிப்பைப் பெற்றவராக இருக்கிறார்.

யார் இந்த அம்பேத்கர்? அப்படி என்ன செய்துவிட்டார்?  

 

police

 

15 நாட்களுக்கு முன்புதான் சிதம்பரத்திலிருந்து வடலூருக்கு காவல்நிலைய ஆய்வாளராக மாறுதலாகிச் சென்றார். சில நாட்களுக்கு முன், வடலூர் நரிக்குறவர் குடியிருப்பு பகுதிக்குச் சென்ற அவர், இருசக்கர வாகனம் ஓட்டும்போது, தலைக்கவசம் அணிவது அவசியம் என்று அறுவுறுத்தினார். ரூ.500-லிருந்து ரூ.1000 வரை செலவழித்து ஹெல்மெட் வாங்குவது அந்த மக்களுக்கு சிரமமான விஷயம் என்பதை அறிந்து, அங்கு டூ வீலர்கள் வைத்திருப்பவர்கள் எத்தனை பேர் என்று கணக்கெடுத்தார்.

 

police

 

தன்னுடைய குடும்ப நண்பரும் விஜய் மோட்டார் ஷோ ரூம் உரிமையாருமான ரவிச்சந்திரனிடமும், டி.வி.எஸ். ஷோ ரூம் உரிமையாளர் ஜெயப்பிரகாஷிடமும், நிலைமையை எடுத்துச்சொல்லி, அத்தனை பேருக்கும் இலவச ஹெல்மெட் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்தார். அவர் இப்படிச் செய்வது முதல்முறை அல்ல. இதற்குமுன், சிதம்பரத்தில் பணியாற்றியபோது, பொது மக்களின் டூ வீலர்களில் பிரேக், ரிவ்யூ மிரர், பம்பர் கம்பி எல்லாம் சரியாக இருக்கிறதா என்று மெக்கானிக் மூலம் செக் செய்து, சில வண்டிகளில் இருந்த சிறுசிறு பழுதுகளை நீக்கிக் கொடுத்திருக்கிறார். விபத்துக்களைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இதையெல்லாம் செய்திருக்கிறார். வாகன சோதனைக்குச் செல்லும்போது, இதற்கென்றே மெக்கானிக்கையும் அழைத்துச் சென்று, இதுபோன்ற பணிகளை மேற்கொள்வார்.

 

police

 

‘என்ன நீங்க இப்படி இருக்கீங்க?’ என்று கேட்பவர்களிடம் ஆய்வாளர் அம்பேத்கர் என்ன சொல்கிறார் தெரியுமா? “எளிய மக்களிடம் பக்குவமாக எடுத்துச் சொன்னால் புரிந்துகொள்வார்கள். காவல்துறைக்கும் வேலைப்பளுகுறையும்.” என்கிறார்.

 

பொதுவாக, காவல்துறையினர் மீது எதிர்மறை விமர்சனங்கள் பல இருந்தாலும், அர்ப்பணிப்போடு கடமையைச் செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அசத்துங்கள் அம்பேத்கர்!

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பரிதாபமாக உயிரிழந்த பெண் ஆய்வாளர்; உடலைச் சுமந்து சென்ற எஸ்.பி!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

புதுக்கோட்டை நகரில் பழைய மருத்துவமனைக்கு அருகே பல வருடங்களாக செயல்படாத சிக்னல் அருகே நகராட்சி சார்பில் ஞாயிற்றுக் கிழமை மதியம் திடீரென பெரிய திண்ணை போல வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில், எந்தவிதமான எச்சரிக்கை அடையாளமும் வைக்கவில்லை, வெள்ளைக் கோடுகள் போடவில்லை. சில மணி நேரங்களுக்குள் திடீர் வேகத்தடையில் பலர் கீழே சாய்ந்தனர்.

sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

அதே போல திருச்சி திருவரம்பூர் 2 காவல் நிலைய ஆய்வாளர் பிரியா தன் குழந்தைகளைப் பார்க்க இரவு பேருந்தில் வந்து இறங்கியுள்ளார். அவரது கணவர் புல்லட்டில் வந்து வீட்டிற்கு அழைத்துச் சென்ற போது பிரதான சாலையில் அடையாளமில்லாமல் அமைக்கப்பட்டுள்ள திடீர் வேகத்தடையில் ஏறி இறங்கும் போது பினனால் இருந்த ஆய்வாளர் பிரியா கீழே சாய பின்பக்கம் தலையில் அடிபட்டு படுகாயமடைந்தார்.

படுகாயமடைந்த ஆய்வாளரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் செவ்வாய் கிழமை (09.04.2024) காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பெண் காவல் ஆய்வாளர் படுகாயமடைந்த பிறகு யாரோ கோலமாவு வாங்கி அடையாளமிட்டனர். அதன் பிறகு இரவில் நகராட்சி நிர்வாகம் அடையாள வெள்ளைக் கோடுகள் போட்டுள்ளனர்.

sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

இந்த நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த ஆய்வாளர் பிரியா உடல் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு மாலையில் அவரது சொந்த ஊரான நெடுவாசல் கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது. அப்போது புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி வந்திதா பாண்டே, டிஎஸ்பிக்கள் ஆலங்குடி பவுல்ராஜ், புதுக்கோட்டை ராகவி, கோட்டைப்பட்டினம் கெளதம் மற்றும் போலீசார் சல்யூட் அடித்து அஞ்சலி செலுத்தினர்.

sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

அனைவரும் அஞ்சலி செலுத்திய பிறகு நடந்த இறுதி ஊர்வலத்தில் எஸ்.பி வந்திதா பாண்டே, உறவினர்களுடன் சேர்ந்து ஆய்வாளர் பிரியாவின் உடலை மயானத்திற்கு தூக்கிச் சென்றது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து ஆய்வாளர் பிரியாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

sp Vandita Pandey paid last respects to woman Inspector who passed away near Pudukottai

புதுக்கோட்டை நகராட்சியில் தீடீரென அமைக்கப்பட்ட வேகத்தடையில் எச்சரிக்கை அடையாளப் பதாகை, வெள்ளைக் கோடு போடாமல் அலட்சியமாக இருந்ததால், ஆய்வாளர் உயிர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சிதம்பரம் கோவில் குளத்தில் குளிக்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்

Published on 04/02/2024 | Edited on 04/02/2024
man who went to bathe in the Chidambaram temple pool drowned

சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் தெருவில் பழம்பெரும் சிவன் கோவில் உள்ளது.  இந்த கோவிலில் சனிக்கிழமை மாலை திருநீலகண்ட நாயனாரின் குருபூஜை விழா நடைபெற்றது. இவ்விழாவில் கோவில் குளத்தில் இறங்கி சுவாமி மற்றும் பக்தர்கள் நீராடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பலர் குளக்கரையில் கூடியிருந்தனர். சுவாமிக்கு குளக்கரையில் பூஜை நடந்து தீர்த்தவாரி நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து அங்கிருந்து பக்தர்களும் பொதுமக்களும் குலத்தில் நீராடச் சென்றனர் அப்போது கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேசன்(47) என்பவர் கோயில் குளத்தில் இறங்கி நீராடினார். சிறிது தூரம் தண்ணீரில் நீந்தி சென்று குளத்தின் நடுவே உள்ள மண்டபம் அருகே நீரில் மூழ்கியுள்ளார். மீண்டும் அவர் வெளியே வரவில்லை. 

இதைப் பார்த்த அப்பகுதியில் இருந்த திமுக நகர்மன்ற உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன் தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பெயரில் நகர காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சம்பந்தப்பட்ட வெங்கடேசனை குளத்தில் இறங்கி ரப்பர் படகு மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர் தொடர்ந்து ஒரு மணி நேரம் தேடிய நிலையில் அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டது.  இது குறித்து சிதம்பர நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  குளத்தில் மூழ்கிய தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்  சோகத்தை ஏற்படுத்தியது.