Skip to main content

குடிநீர் திட்டத்திற்கு ரூ 7.18 கோடியில் போடபட்ட திட்டம் பாழடைந்து வருகிறது

Published on 27/02/2019 | Edited on 27/02/2019

 

சிதம்பரம் நகரில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கொள்ளிடம் ஆற்றிலிருந்து குடிநீர் கொண்டுவரும் திட்டம் மக்களின் வரி பணத்தில் 7.18 கோடி ரூபாய் செலவில் போடப்பட்டது. தற்போது இந்தத் திட்டம் பாழடைந்து உபயோகம் இல்லாமல் சீர்கெடுகிறது. சிதம்பரம் நகரின் நிலத்தடியில் தண்ணீர் எடுக்க கூடாது என்று கொள்ளிடம் குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அதை புனரமைக்காமல் தற்போது சிதம்பரம் நகரின் நிலத்தடியில் சுமார் 800 அடி ஆழத்தில் ஆழ்குழாய் அமைத்து தண்ணீர் உறிஞ்சுகிறார்கள்.

 

chidambaram city

கோடை காலம் நெருங்குவதால் வக்காரமாரி சிதம்பரம் நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரியான வக்கராமாரி ஏரி நீர் வற்றி வருகிறது.  மேட்டூரில் இருந்து திறக்கப்படும் அனைத்து தண்ணீரையும் கடலுக்குள் விட்டு விட்டு கீழே நிலத்தடியில் கடல் நீரே உள்ளே உறிஞ்சப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் 500 அடியில் தண்ணீர் உறிஞ்சுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்பொழுது 800 அடியில் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் 1000 அடிக்கு கீழ் உறிஞ்சப்படும் நிலை ஏற்படும். மேலும் இதே நிலை நான்கு, ஐந்து ஆண்டுகள் தொடர்ந்தால் சிதம்பரம் பகுதி முழுவதுமே உப்பு நீர் மட்டும்தான் நிலத்தடியில் கிடைக்கும்.
 

எனவே கொள்ளிடம் ஆற்றில், ஏற்கனவே போடப்பட்ட நீர் உறிஞ்சும் கிணறுகளை புனரமைத்து பயன்படுத்த வேண்டுமென்றும், சிதம்பரம் நகர நீர்த் தேவைக்கு சிதம்பரம் நகரின் நிலத்தடி மட்டத்தில் நீர் உறிஞ்சுவதை நகராட்சி நிறுத்த வேண்டும் என்றும் சிதம்பரம் வர்த்தக சங்கம் உள்ளிட்ட சமூக அமைப்புகள் போராட்டங்களை நடத்தினர். சிதம்பரத்திற்கு கவர்னர் வருகையின்போது அவரது கவனத்தை ஈர்த்தனர். மேலும் இதே நிலை நீடித்தால் பல்வேறு தரப்பு மக்கள் இதனை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடவும் முடிவுசெய்துள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Next Story

தண்ணீர் தேடிச் செல்லும் வன விலங்குகள் பலியாகும் துயரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Tragedy of wild animals lost life in search of water

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டதால் ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் கால்நடைகளுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. அதேபோல தமிழ்நாடு முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காடுகளிலும் தண்ணீர் இன்றி மரங்கள் கருகி வருவதுடன் வனவிலங்குகளும் தண்ணீர் இன்றி தவித்து வருகிறது.

இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமாக உள்ள வனப்பரப்புகள் மற்றும் கீரமங்கலம் மற்றும் சேந்தன்குடி, குளமங்கலம், மேற்பனைக்காடு, நெய்வத்தளி உள்ளிட்ட பல கிராமங்களில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே பலமரக்காடுகள் அழிக்கப்பட்டு முந்திரி மற்றும் தைலமரக்காடுகளாக பராமரிக்கப்பட்டு வந்தது.

இதனால் பலமரக்காடுகளில் இருந்த முயல், மான், மயில்கள், குருவிகள், பறவைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. தற்போது தைலமரக்காடுகள் அழிக்கப்பட்டு முந்திரி மரக்காடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தக் காடுகளில் வன உயிரினங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் இந்தக் காடுகளில் உள்ள மான் போன்ற உயிரினங்கள் தண்ணீர் தேடி வெளியிடங்களுக்குச் செல்லும் போது நாய்களால் கடித்து குதறப்படுகிறது. அதேபோல தண்ணீர் தேடி சாலையைக் கடக்க முயலும்போது வாகனம் மோதி பலியாகிறது. இதேபோல புதுக்கோட்டை  மாவட்டத்தில் திருமயம், கீரமங்கலம் என மாவட்டம் முழுவதும் பல விபத்து சம்பவங்களில் மான்கள், மயில்கள் போன்ற உயிரினங்கள் பலியாகி வருகிறது. இதேபோல வியாழக்கிழமை கீரமங்கலம் பகுதியில் இருந்து தண்ணீர் தேடிச் சென்ற ஒரு மான் திசை மாறி பேராவூரணி பக்கம் சென்றுள்ளது. அந்த மானை பொதுமக்கள் பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

ஆகவே, கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் காடுகளில் சுற்றித்திரியும் பறவைகள், வன உயிரினங்களுக்கு இரையும், தண்ணீரும் கிடைக்காமல் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் வரும் மயில், மான் போன்றவற்றை நாய்கள் கடிப்பதும், விபத்துகளில் சிக்கி பலியாவதும் தொடர்ந்து கொண்டிருப்பதால்  ஒவ்வொரு காட்டுப் பகுதியிலும் சில இடங்களில் கோடைக்காலம் முடியும் வரை தண்ணீர் தொட்டிகள் அமைத்து வன உயிரினங்களைப் பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் கிடைக்காமல் இப்படி வெளியில் வந்து விபத்துகளில் சிக்கி பலியாகிறது. ஆகவே வனத்துறை தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும். கோடை வெயிலில் தாகத்தில் தவிக்கும் மக்களுக்கு ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைப்பது போல வன உயிரினங்களின் தாகம் தீர்க்கவும் உயிர் காக்கவும் தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் என்கின்றனர் இளைஞர்களும் விவசாயிகளும்.

மேலும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வனப்பகுதியில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டது சில நாட்கள் தண்ணீர் வைக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு தண்ணீர் வைத்து பராமரிப்பு செய்யவில்லை. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் JJ வடிவத்தில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகளில் கூட தண்ணீர் இல்லை. வனவிலங்குகளை காக்க தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.