Skip to main content

வீட்டை காலி செய்யக் கூறியவருக்கு நிகழ்ந்த சோகம்; இளம்பெண் கைது

Published on 13/03/2023 | Edited on 13/03/2023

 

chennai taramani house tennant woman srija incident 

 

சென்னை தரமணி கம்பர் தெருவைச் சேர்ந்தவர் சாந்தகுமாரி (வயது 56). இவருக்கு இரு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் மூவருக்கும் திருமணமாகி தங்களது குடும்பத்தினருடன் தனித்தனியாக வசித்து வருகின்றனர். சாந்தகுமாரியின் மேல் வீட்டில் ஸ்ரீஜா (வயது 20) என்ற இளம்பெண் ஒருவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். மேலும், சாந்தகுமாரியின் இளைய மகளான உஷா தனது தாயாரின் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார்.

 

இந்நிலையில், நேற்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வராத தனது தாயாரான சாந்தகுமாரியை பார்த்து விட்டு வருமாறு தனது மகனிடம் கூறியுள்ளார். அப்போது அங்கு சென்று பார்த்தபோது கதவு திறந்த நிலையில் இருந்ததோடு தனது பாட்டி கீழே விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த உஷாவின் மகன், இது குறித்து உஷாவிடம் கூறியுள்ளார். உடனடியாக உஷா தனது தாயாரை சென்று பார்த்தபோது தலையில் ரத்த காயத்துடன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன் இது குறித்து தரமணி போலீசாருக்கு தகவல் கொடுத்து உள்ளார்.

 

மேலும், வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டு விசாரணை செய்தபோது, பீரோவில் இருந்த 3.5 லட்சம் பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், போலீசார் இது தொடர்பாக நடத்திய தீவிர விசாரணையில் ஸ்ரீஜா வாடகைக்கு குடியிருந்து வரும் மேல் வீட்டை ஒருவருக்கு 3.5 லட்சத்துக்கு குத்தகைக்கு விட முடிவு செய்து அவரிடம் இருந்து பணத்தை பெற்று தனது வீட்டில் இருந்த பீரோவில் சாந்தகுமாரி வைத்திருந்தார். மேலும் ஸ்ரீஜாவை வீட்டில் இருந்து காலி செய்யவும் கூறி உள்ளார். இதனைத் தொடர்ந்து வீட்டை விட்டை காலி செய்த ஸ்ரீஜா சாந்தகுமாரியின் வீட்டில் புகுந்து பீரோவில் வைத்திருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடிப்பதை பார்த்த சாந்தகுமாரிக்கும்  ஸ்ரீஜாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஸ்ரீஜா சாந்தகுமாரியை கீழே தள்ளிவிட்டதில் படுகாயம் அடைந்து உயிரிழந்துள்ளார். பின்னர் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து ஸ்ரீஜா தப்பிச் சென்றது தெரியவந்தது இதனைத் தொடர்ந்து ஸ்ரீஜாவை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தரமணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்