Skip to main content

துண்டுதுண்டாக வெட்டப்பட்ட நடிகையின் உடல் பாகம்..! இரண்டு மாதங்களுக்குப் பிறகு இறுதி சடங்கு..!

Published on 06/04/2019 | Edited on 07/04/2019

கடந்த ஜனவரி இருபத்தி ஒன்றாம் தேதி சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் மாநகராட்சி ஊழியர்கள் மக்கும் குப்பை மக்காத குப்பை பிரித்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு அரிசி பையில் இளம் பெண்ணின் வலது கை மற்றும் இரண்டு கால்களும் வெட்டப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே சம்பந்தப்பட்ட காவல் நிலையமான பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் ஆல்பின் ராஜ் இளம்பெண்ணின் பாகங்களை கைப்பற்றி விசாரணையை தொடங்கினார்..!  எந்த ஒரு துப்பு கிடைக்காமல் விசாரணையை தொடங்கிய காவல்துறையினருக்கு கிடைத்த ஒன்று அந்தக் குப்பை சென்னை மாநகராட்சி பத்தாவது மண்டலம் ஆன கோடம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் குப்பை கிடங்கில் இருந்து கொண்டுவரப்பட்ட குப்பை என்பது தெரியவந்தது. 

 

murder

 

அதன்பேரில் அப்பகுதியில் ஏதேனும் இளம் பெண்கள் காணாமல் போன புகார்கள் அப்பகுதி காவல் நிலையத்தில் பதிவாகி உள்ளதா என்று விசாரணையை தொடங்கினர். ஆனால் சென்னை மாநகர காவல் எல்லையில் வெட்டப்பட்ட நிலையில் கிடைத்த உடல் பாகத்தின் பெண்ணின் வயது சுமார் 35 இருக்கும் என்ற நிலையில் அதுபோன்ற எந்த ஒரு பெண்ணும் சமீபத்தில் காணாமல் போனதாக புகார்கள் எதுவும் பதிவாகவில்லை. போலீசாரின் விசாரணையில் அடுத்த கட்டமாக அந்தப் பெண்ணின் கை மற்றும் கால்களில் குத்தப்பட்டிருந்த சிவன் பார்வதி மற்றும் டிராகன் டாட்டூஸ் எனப்படும் பச்சை குத்தப்பட்டிருந்தது. அதையும் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர் மேலும் உடல் பாகங்கள் கிடைத்த அரிசிப் பையை வைத்து விசாரணை நடத்தினர். அதிலும் போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதனால் இந்த வழக்கு சுணக்கம் அடைந்த நிலையில் கொலை செய்யப்பட்ட அந்தப் பெண் ஆந்திர மாநிலம் அல்லது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

 

murder

 

இந்த நிலையில் தூத்துக்குடி போலீசார் கொடுத்த தகவலின்பேரில் நாகர்கோவில் மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்த ஞாழா என்ற கிராமத்தை சேர்ந்த சந்தியா என்ற பெண் என்ற தகவலை தூத்துக்குடி வடக்கு காவல் ஆய்வாளர் பிரபாகரனுக்கு தகவல் கிடைத்தது. அவருக்கு தகவல் அளித்தவர் சந்தியாவுடன் சில காலத்திற்கு முன் நெருக்கமானவர்கள் என்பதும் அவர் கையில் குத்தப்பட்டிருந்த பச்சை வைத்து அவராக இருக்கலாம் என்ற தகவலை அவர்கள் கொடுத்தனர். உடனே ஆய்வாளர் பிரபாகரன் தெற்கு காவல் ஆய்வாளர் சம்பத்திற்கு தகவல் கொடுத்தார். ஆய்வாளர் சம்பத் சென்னை பள்ளிக்கரணை ஆய்வாளர் ஆல்பின் ராஜ்க்கு தகவல் கொடுத்தார். அதன்பிறகு விசாரணையை துவங்கிய போலீசார் கொலை செய்யப்பட்ட சந்தியா என்பதை உறவினர் மூலம் உறுதிப்படுத்தினர்.

 

murder

 

இந்த கொலையை செய்தது காதல் கணவர் பாலகிருஷ்ணன் என்பதும் விசாரணையில் தெரியவந்தது சந்தியாவின் நடத்தையில் சந்தேகம் இருந்ததால் மேலும் சந்தியாவுக்கு பல தொடர்புகள் இருந்தது அதை விடும்படி பலமுறை கூறியும் அவர் அதை மறுத்ததால் ஆத்திரத்தில் அவரை சுத்தியால் அடித்து கொலை செய்து பிறகு உடலை துண்டு துண்டாக வெட்டி வெவ்வேறு இடங்களில் போடப்பட்டதாக சந்தியாவின் கணவர் பாலகிருஷ்ணன் ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் வெட்டப்பட்ட பாகங்களில் வழக்குக்கு மிக முக்கியமானதாக கருதப்படும் தலை இதுவரை கிடைக்காத நிலையில் சந்தியாவின் உடல் பாகங்களை 2மாதம் கழிந்து தற்போது இறுதி சடங்குக்காக உறவினர்களிடம் நாளை ஒப்படைக்க உள்ளது. அதன்படி நாளை மாலை சந்தியாவின் உடல் பாகங்கள் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.