Skip to main content

சென்னையில் 3 பேர் சுட்டுக்கொலை- மருமகள் உள்பட 3 பேர் கைது!

Published on 13/11/2020 | Edited on 13/11/2020

 

chennai family incident three persons arrest to chennai police

சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் மருமகள் உள்பட 3 பேரை அதிரடியாக கைது செய்தது தனிப்படை போலீஸ்.

 

சென்னை சவுகார்பேட்டையில் ஜீவனாம்சம் பிரச்சனையில் கணவர் ஷீத்தல், மாமனார் தலித் சந்த், மாமியார் புஷ்பாவை சுட்டுக்கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த மருமகள் ஜெயமாலா உள்ளிட்ட 3 பேரை புனேவில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திக் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

 

இதனிடையே, சுட்டுக்கொல்லப்பட்ட 3 பேரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், 3 பேரின் உடல்களில் இருந்து எடுத்த குண்டுகளை ஆய்வு செய்ததில் கொலையாளி நாட்டு ரக துப்பாக்கியால் சுடப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

 

 

சார்ந்த செய்திகள்