Skip to main content

பேரணி நடத்திய மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு!

Published on 24/12/2019 | Edited on 24/12/2019

சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து,நேற்று (23.12.2019) திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தலைமையில் பேரணி நடைபெற்றது.  இந்த பேரணி எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் இருந்து ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை நடந்தது.  

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கே.எஸ்.அழகிரி, கி.வீரமணி, வைகோ எம்.பி, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் எம்.பி, காதர்மொய்தீன், ஜவாஹிருல்லா, ப.சிதம்பரம், வேல்முருகன், ஈஸ்வரன், கனிமொழி எம்.பி, தயாநிதிமாறன் எம்.பி, உதயநிதி ஸ்டாலின், ஐஜேகேவின் ஜெயசீலன் உள்ளிட்ட தலைவர்கள் பேரணியில் பங்கேற்றனர். பேரணியில் பங்கேற்றவர்கள் குடியுரிமை சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி முழக்கத்தை எழுப்பினர். இந்த பேரணியில் சுமார் 60,000- க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

CHENNAI DMK RALLY EGMORE POLICE STATION FIR FILED


இந்நிலையில் காவல்துறை உத்தரவை மீறி குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக திமுக மற்றும் அதன் தோழமைக்கட்சிகள் பேரணி சென்றதாகக் கூறி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 8 ஆயிரம் பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியர் உத்தரவை மதிக்காமல் இருத்தல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் எழும்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஹெல்மெட்டை திருடிய சிறப்பு எஸ்.ஐ

Published on 13/10/2023 | Edited on 13/10/2023

 

The special SI who stole the helmet in chennai

 

சென்னை எழும்பூர் பகுதியில் பிரபல ஹோட்டல் ஒன்று உள்ளது. இந்த ஹோட்டலுக்கு சத்ய நாராயணன் என்பவர் உணவு சாப்பிடுவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் நேற்று முன் தினம் (11-10-23) வந்துள்ளார். அப்போது, அந்த இரு சக்கர வாகனத்தை ஹோட்டல் பார்க்கிங் நிறுத்தத்தில் நிறுத்தி, அதில் தனது ஹெல்மெட்டை வைத்து விட்டு ஹோட்டலுக்கு சென்றுவிட்டார். 

 

அதன் பிறகு, சாப்பிட்டு விட்டு வெளியே வந்து பார்த்த போது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த தனது ஹெல்மெட் இல்லாதததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.  இந்த சம்பவம் குறித்து ஹோட்டல் நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து, ஹோட்டல் நிர்வாகமும் இது குறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் அங்கு வந்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ஹோட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், காக்கி சட்டை அணிந்திருந்த போலீஸார் ஒருவர் ஹெல்மெட்டை திருடிய காட்சி பதிவாகியிருந்தது. 

 

மேலும், காவல்துறையினர் விசாரணையில், எழும்பூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் விஜயன் என்பவர் தான் ஹெல்மெட்டை திருடியுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்தது. இந்த சம்பவம் குறித்து சிறப்பு உதவி ஆய்வாளர் விஜயனிடம் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறப்பு உதவி ஆய்வாளர் ஹெல்மெட்டை திருடிய வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

 

Next Story

ஆதரவற்றவர்களை முகாம்களுக்கு அனுப்பிய காவல்துறையினர்!! (படங்கள்)

Published on 05/06/2021 | Edited on 05/06/2021

 

 

எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆதரவற்றவர்கள் தங்கும் இடம் இல்லாமல் எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் சுற்றித் திரிந்துள்ளனர். அவர்களை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அழைத்து சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தும் ஆதரவற்றோர் விடுதி முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.