Skip to main content

'கோடம்பாக்கத்தில் 546 பேருக்கு கரோனா'- சென்னை மாநகராட்சி!

Published on 09/05/2020 | Edited on 09/05/2020

 

chennai coronavirus zones list chennai corporation


தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டதவர்களின் எண்ணிக்கை 6,009 ஆக அதிகரித்துள்ளது. இதில் 1,605 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 40 பேர் உயிரிழந்தனர். 

குறிப்பாக சென்னையில் கரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் எந்தெந்த பகுதியில் எத்தனை பேருக்கு கரோனா என்பதை மண்டலம் வாரியாகப் பட்டியலை வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி. 

 

 

chennai coronavirus zones list chennai corporation


அதன்படி, சென்னை கோடம்பாக்கம் மண்டலத்தில் கரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 546 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கோடம்பாக்கம் மண்டலம் கருஞ்சிவப்பு மண்டலமானது. அதேபோல் ராயபுரத்தில் 490 பேர், திரு.வி.க.நகரில் 477 பேருக்கும் கரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

மேலும் திருவொற்றியூர் 45, மாதவரம் 35, தண்டையார் பேட்டை 207, அம்பத்தூர் 164, தேனாம்பேட்டை 343, வளசரவாக்கம் 256, அண்ணாநகர் 233, அடையாறு 140, பெருங்குடி 32, சோழிங்கநல்லூரில் 25, மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 12 பேர் என மொத்தம் 3,043 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையின் 15 மண்டலங்களில் 9 மண்டலங்களில் மட்டும் கரோனா பாதிப்பு 100க்கும் அதிகமாக உள்ளது. ஆலந்தூர் மற்றும் மணலியில் தலா 19 பேர் பாதிப்புடன் குறைந்த அளவு பாதிப்பு மண்டலங்களாக நீடிக்கின்றன. 
 

chennai


சென்னையில் மட்டும் 3,043 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 390 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 24 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற 2,617 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 


 

சார்ந்த செய்திகள்