Skip to main content

சிலை கடத்தல் வழக்கில் கோவில் எழுத்தர் கைது!! அதிர்ச்சியில் மனைவி விஷம் அருந்தி மருத்துவமனையில் சிகிச்சை!!

Published on 05/07/2018 | Edited on 05/07/2018

சிலை கடத்தல் வழக்கில்  சிறைக்கு சென்று ஜாமீனில் வந்த  தலைமை எழுத்தர் ராஜாவின் வீட்டிற்கு இந்து சமய அறநிலையத்துறையினர் சீல் வைத்தனர். அதனை கண்டித்து ராஜாவின் மனைவி விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

poison

 

 

 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூரில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கோட்டை மற்றும் அகழியுடன் கூடிய பசுபதீஸ்வரர் கோயில் உள்ளது. ஆயிறம்ஆண்டுகள் பழமையான அந்த கோயிலில் சுற்றியுள்ள 73 கிராம கோயில்களிலிருந்து பழமையான, ஐம்பொன் சிலைகள், வெங்கலசிலைகள் ஆபரனங்கள் உள்ளிட்டவைகளை பாதுகாப்பிற்காக பசுபதிஸ்வரர் கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வந்து வைத்திருந்தனர்.

 

இந்நிலையில் கடந்த 2013 ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையினர் சிலைகளை கணக்குஎடுத்தனர். பாதுகாப்பாக இருந்த சிலைகளில் கீழமணக்குடி விஸ்வநாதசுவாமி கோயிலுக்குரிய விநாயகர், புஷ்பகரணி, வள்ளி- தெய்வாணை, சந்திரசேகரஅம்மன் சிலைகளும், ஸ்ரீரெங்கராஜபுரம் இடும்பேஸ்வரர் கோயிலுக்குரிய விநாயகர் சிலை என மொத்தம் 6 சிலைகள் காணாமல் போயிருந்தது.

 

6 சிலைகள் மாயமானது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையின் மயிலாடுதுறை இணை ஆணையராக இருந்த த.கஜேந்திரன், முன்னாள் செயல் அலுவலர்கள் கு.காமராஜ், ராமச்சந்திரன், கோயில் தலைமை எழுத்தர் ராஜா உள்ளிட்ட 10 பேரை போலீஸார் கடந்தாண்டு நவம்பர் மாதம் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.  பின்னர் ஜாமீனில் அனைவரும் வெளியே வந்துள்ளனர்.

 

poison

 

சிலை கடத்தல் வழக்கில் சிறைக்கு சென்றவர்கள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் இருக்க கூடாது என பொதுநல வழக்கு போடப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோயில் அருகே இருக்கும் ராஜாவின் வீட்டுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். 

இந்நிலையில் இன்று 5ம் தேதி மதியம் கும்பகோணம் இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா, திருவிடைமருதூர் வட்டாட்சியர் ராஜேஸ்வரி, போலீஸ் டிஎஸ்பி ராமச்சந்திரன் ஆகியோர் கொண்ட குழுவினர் பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயில் கோட்டை தெருவில் குடியிருக்கும் ராஜாவின் வீட்டுக்கு சென்றனர்.

 

 

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கோயில் இடத்தில் குடியிருக்கும் வீட்டை உடனடியாக காலி செய்ய வேண்டும். இல்லையென்றால் சீல் வைக்கப்படும் என உதவி ஆணையர் தெரிவித்தார். அதற்கு ராஜா காலஅவகாசம் கேட்டுள்ளார். அதற்கு அறநிலையத்துறையினர் மறுத்து உடனடியாக வீட்டுக்கு சீல் வைத்தனர்.

இதனால் வீட்டுக்கு வெளியே வந்த ராஜா, அவரது மனைவி சரண்யா (எ ) அபினேஸ்வரி பாட்டி சந்திரா  ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அபினேஸ்வரியும், சந்திராவும் வீட்டின் தோட்டத்தில் வைத்திருந்த வாழைமரங்களுக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லியை குடித்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகி்ச்சைக்காக சேர்த்தனர்.

 

​​

 

 

 

இதுகுறித்து ராஜா கூறுகையில், " பந்தநல்லூர் கோயில் கோட்டையைச் சுற்றி ஏராளமானோர் குடியிருந்து வருகின்றனர். நாங்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு குடியிருந்து வருகிறோம்.நான் சிலை கடத்தல் வழக்கில் கைதாகினேன். இந்த வழக்கு வரும் 11 ம் தேதி கும்பகோணத்தில் விசாரணைக்கு வருகிறது.

இந்த வழக்கில் நான் அறநிலையத்துறை அதிகாரிகளை காட்டி கொடுத்துவிடுவேன் என பயந்து போய் என்னுடைய வீட்டுக்கு மட்டும்  அறநிலையத்துறையினர் சீல் வைத்துள்ளனர். வீட்டை காலி செய்ய ஒரு நாள் அவகாசம் கேட்டும் கொடுக்கவில்லை. எங்களுடைய அனைத்து பொருட்களும் வீட்டில் உள்ளே உள்ளது. தற்போது நான், பாட்டி, மனைவி, மகன், மகளை வைத்துக்கொண்டு நடுத்தெருவில் நிற்கிறேன்" என்றார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

மன்சூர் அலிகானுக்கு தீவிர சிகிச்சை

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்தது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கிய நிலையில் இன்று மாலை 6 மணியோடு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார் மன்சூர் அலிகான். பலாப்பழ சின்னத்தில் போட்டியிடும் அவர், தொடர்ச்சியாகக் காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் என வேலூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் அவரது வழக்கமான நக்கல் கலந்த பாணியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதையடுத்து பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று வேலூர் குடியாத்தம் பகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்ட மன்சூர் அலி கானுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை கே.கே.நகரில் உள்ள மருத்துவமனையில் தற்போது மன்சூர் அலிகான் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வில்லேஜ் குக்கிங் சேனல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Village cooking channel put an end to rumours

வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூடியூப் சேனலில் வரும் சமையல் வீடியோவில் ‘இன்னைக்கு ஒரு புடி’என்ற வசனத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தவர் பெரியதம்பி தாத்தா. இவர் சமீபத்தில் இதயநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக வில்லேஜ் குக்கிங் சேனல் நிர்வாகி சுப்ரமணியன் வேலுசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், “தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சூழலில் வில்லேஜ் குக்கிங் சேனலில் தோன்றும் தாத்தாவின் மருத்துவ செலவுக்கு உதவ காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி எம்.பி. மறுத்துவிட்டார் என பொய் செய்திகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் இந்த வதந்தியை சுப்ரமணியன் வேலுசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் வதந்தியாக பரப்பப்பட்ட செய்தியை மேற்கோள்காட்டி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இது முற்றிலும் பொய்!. எங்களது வளர்ச்சிக்கு உதவிய அன்பான மனிதன் ராகுல் அண்ணாவின் மீது இப்படி எங்களையே பயன்படுத்தி அவதூறு பரப்புவது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது!.

இப்படி பொய் செய்திகளை பரப்புபவர்களது கட்சித் தலைமை இதனை கட்டுப்படுத்த வேண்டுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வில்லேஜ் குக்கிங் சமையல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது கிராமத்துச் சூழலில் ஓலைப்பாயில் சம்மணம் போட்டு அமர்ந்து காளான் பிரியாணியை ரசித்து சாப்பிட்ட வீடியோ மக்கள் மத்தியில் வைரலானது குறிப்பிடத்தக்கது.