Skip to main content

தனியார் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து 20 பேர் படுகாயம்

Published on 30/12/2018 | Edited on 30/12/2018
a

 

புதுக்கோட்டையில் இருந்து கும்மங்குளம் வழியாக ஆலங்குடி செல்லும் ஆர். எஸ். டி. தனியார் பேருந்து வழக்கம் போல இன்று மாலை புதுக்கோட்டையிலிருந்து புறப்பட்டு 10 கி. மீ. சென்ற நிலையில் மணியம்பள்ளம் என்ற கிராமம் அருகே தைல மரக்காட்டில் நேரான சாலையில் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்தது.

 

இந்த விபத்தில் அதில் பயணம் செய்த சுமார் 20 பயணிகள் படுகாயமடைந்தனர். விபத்து பற்றி அறிந்த அப்பகுதி இளைஞர்களும் பொதுமக்களும் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 நேரான சாலையில் எப்படி பேருந்து கவிழ்ந்தது என்பது குறித்து போலிசார் விசாரணை செய்து வருகின்றனர். 

 

acc


   
 

சார்ந்த செய்திகள்

Next Story

விபத்து ஏற்படுத்திய அரசுப் பேருந்து மீது வழக்கு இல்லையா?

Published on 12/01/2024 | Edited on 12/01/2024
Is there no case against the government bus that caused the accident?

சென்னையை அடுத்த மணலி பகுதியிலிருந்து பிராட்வே நோக்கி நேற்று காலை (11-01-24) மாநகர பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, பேசின் பிரிட்ஜ் பாலம் வழியாகச் சென்று கொண்டிருந்த இந்த பேருந்து, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், பேருந்து தாறுமாறாக ஓடி முன்னால் சென்றுகொண்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் 3 மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

இதில், மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் லேசான காயங்களுடன் தன்வாய்ப்பாக உயிர்த் தப்பினர். ஆனால், அதில் ஒருவர் மட்டும் தனது மோட்டார் சைக்கிளுடன் பேருந்துக்கு அடியில் சிக்கிக்கொண்டார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக வந்து, பேருந்தை பின்புறமாகத் தள்ளி, சிக்கிய நபரை மீட்டனர். இதனையடுத்து, பலத்த காயமடைந்த அவரை உடனடியாக அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து எந்த புகாரும் வராததால், போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், இந்த விபத்தை ஏற்படுத்திய அரசுப் பேருந்து மீது வழக்கு இல்லையா? என இணையதளத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Next Story

சொகுசுப் பேருந்தின் முன் டயர் வெடித்து விபத்து; டோல்கேட் நாசம்

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
Front tire burst accident of luxury bus; Tollgate destroyed

சேலம் அருகே தனியார் பேருந்தின் முன்பக்க டயர் வெடித்ததில் இரவு வேளையில் தாறுமாறாக ஓடிய பேருந்து டோல்கேட் பகுதியில் நிறுத்தபட்டிருந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தனியார் சொகுசு பேருந்து ஒன்று இரவில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்தின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து குமாரபாளையம் சுங்கச்சாவடி அருகே நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது. பின்னர் தாறுமாறாக பேருந்து இடிபாடுகளில் சிக்கி நின்றது. இதில் பேருந்தின் முன்பகுதி முழுவதுமாக சேதமடைந்தது. இந்த விபத்தில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேரத்தில் இந்த விபத்து நடந்ததால் பெரும் சேதங்கள் தவிர்க்கப்பட்டதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.