Skip to main content

அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

Published on 19/07/2020 | Edited on 19/07/2020
jhk

 

சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்தின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மதியம் தொலைபேசியில் பேசிய மர்ம நபர் ஒருவர், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கக்கூடிய அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டினார்.  இதுகுறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறையிலிருந்து நீலாங்கரை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், நீலாங்கரை போலீசார் மோப்ப நாயுடன் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்தின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.

 

இதனையடுத்து மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் இருந்து போன் அழைப்பு வந்தது கண்டுபடிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு புவனேஸ்வரன் என்ற 20 வயது வாலிபரை கைது செய்தனர். இவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மிரட்டல் விடுத்ததும் கண்டுபடிக்கப்பட்டது. அண்மையில் சில நாட்களுக்கு முன்பு இதேபோல் நடிகர் விஜய்யின் வீட்டிற்கும் இதேபோல் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதுவும் புரளி என்பது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.

 

சார்ந்த செய்திகள்