Skip to main content

பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா மீது மேலும் ஒரு புகார்!

Published on 08/04/2022 | Edited on 08/04/2022

 

BJP Another complaint against National Executive Committee member H. Raja!

 

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது அலி. அதேபகுதியில் உள்ள வயல் பகுதியில் வீடு கட்டுவதற்காக அனுமதி பெற்று கட்டிடம் கட்டியுள்ளார். பின்னர் தனது மனைவி பெயரில் அறக்கட்டளை தொடங்கி, அதற்கான அலுவலகம் என்று பெயர் பலகையும் வைத்திருந்தார்.

 

மேலும் கட்டிடம் கட்டுமானப் பணியின் போது கட்டிடத்தின் முகப்பில் பள்ளிவாசல்களில் அமைக்கப்படுவது போல மனோராக்கள் அமைத்து வருவதால், வீடுகட்ட அனுமதி பெற்று வழிபாட்டு தலம் கட்டுவதாகக் கூறி கட்டிடத்தின் முகப்பில் உள்ள மனோராக்களை அகற்ற வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதி பா.ஜ.க வினர் போராட்டம் அறிவித்த நிலையில் வருவாய் துறை, ஊரக உள்ளாட்சி துறை, காவல் துறை அதிகாரிகள் நடத்திய சமாதானப் பேச்சுவார்த்தையில் மனோராக்களை 2021 டிசம்பருக்குள் அகற்ற உறுதியளிக்கப்பட்டு எழுதிக் கொடுத்துள்ளனர். ஆனால் தற்போது வரை மனோராக்கள் அகற்றப்படவில்லை அவற்றை அகற்ற வேண்டும் என்று கடந்த மார்ச் 4- ஆம் தேதி பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா தலைமையில் மழைமாரியம்மன் கோயிலில் இருந்து பா.ஜ.க வினர் ஊர்வலமாகச் சென்று முற்றுகை போராட்டம் நடத்த முயன்ற போது சாலையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். 

 

அதன் பிறகு சாலையிலேயே நடந்த பேச்சுவார்த்தையில் ஏப்ரல் 12- ஆம் தேதிக்குள் கட்டிட உரிமையாளரே மனோராக்களை அகற்றிக் கொள்ள கேட்டுக் கொள்வது, அகற்றத் தவறினால் ஏப்ரல் 13- ஆம் தேதி அதிகாரிகள், காவல்துறையினர் முன்னிலையில் மனோராக்களை அகற்றுவதாக அதிகாரிகள் முன்னிலையில் ஊராட்சி மன்றத் தலைவர் மஞ்சுளா எழுதிக் கொடுத்தார். அதன் பிககே சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு போராட்டம் முடிவுக்கு வந்தது.

BJP Another complaint against National Executive Committee member H. Raja!

இந்த போராட்டத்திற்கு வந்திருந்த பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர் மெய்யநாதன், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளைப் பற்றி அவதூறாக பேசியதால் அதனால் ஹெச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த ஏப்ரல் 6- ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கவிவர்மன் கீரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்திருந்தார். 

 

அதேபோல இன்று மேற்பனைக்காடு ஜமாத் நிர்வாகத்தினர் ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதேபோல கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஹெச்.ராஜா மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. அதனால் தற்போது நடவடிக்கை இல்லை என்றால் போராட்டங்கள் நடத்தப்படும் என்றனர். பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா மீது அடுத்தடுத்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்படும் நிலையில் வழக்கு பதிவு செய்வது குறித்து காவல் உயர் அதிகாரிகள் சம்பவதன்று எடுக்கப்பட்ட வீடியோக்களை ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில் ஹெச்.ராஜா மீது கீரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.