Skip to main content

50 அடி ஆழ கிணற்றிற்குள் தவித்த குட்டி யானை, கடும் போராட்டத்திற்கு பின்பு மீட்பு...

Published on 21/01/2019 | Edited on 23/01/2019
baby elephant


 

நெல்லை மாவட்டத்தின் குளியன்குடி அருகே உள்ளது மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியை ஒட்டி ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. அதில் எப்போதும் விவசாய பயிர்கள் செய்யப்படும், அதனையொட்டி தென்னந்தோப்புகளும் உள்ளன. அந்தப்பகுதியில் குருசாமி என்பவரது நிலமும் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு மலைப்பகுதியிலுள்ள யானை கூட்டங்கள் தண்ணீர் அருந்துவதற்காக இந்த விளைநிலப்பகுதிக்குள் வந்துள்ளன. அந்த யானைகள் தென்னந்தோப்பிலுள்ள தென்னை மரத்தையும் சேதப்படுத்தியுள்ளன.


இதனிடையே அந்த யானைகளில் சுமார் 4 வயதுடைய குட்டி யானை ஒன்று அங்குள்ள 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்திருக்கிறது. அதில் 15 அடி ஆழம் வரை தண்ணீரும் உள்ளது. இதனிடையே இன்று காலை தன் விவசாய நிலத்திற்கு சென்ற குருசாமி கிணற்றிலிருந்து சத்தம் வருவதைக் கேட்டு எட்டிப்பார்த்திருக்கிறார். அப்போது குட்டியானை தண்ணீரில் நீந்தியபடி உயிருக்கு போராடியிருக்கிறது. உடனே அவர் குளியன்குடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். ரேஞ்சர் அயுக் கான் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்திருக்கிறார்கள். தவித்த யானையைக் கண்டவர்கள் அதை மீட்பதற்கு கடுமையாக போராடியிருக்கிறார்கள். இறுதியாக ஜே.சி.பி. இயந்திரம் வரவழைக்கப்பட்டு அதன்மூலம் பெரும் பள்ளம் தோண்டப்பட்டது அதன் வழியாக கயிறுகளைக்கொண்டு யானையை மீட்டனர். இந்தப் போராட்டம் 4 மணிநேரம் வரை நீடித்துள்ளது. அது எப்போது விழுந்ததென்று தெரியாது, ஆனாலும் அதை உயிரோடு மீட்டுவிடவேண்டுமென்று நாங்கள் நடத்திய போராட்டத்திற்கு வெற்றி கிடைத்தது. குட்டி யானையும் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது என்றார்கள் வனத்துறையினர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கூட்டமாக படையெடுத்து வந்த யானைகள்; அச்சத்தில் கிராம மக்கள்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Coimbatore Thondamuthur elephant issue

மேற்குத்தொடர்ச்சி வனப்பகுதியில் கோடைக் காலத்தையொட்டி கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் உணவு மற்றும் குடிநீரைத் தேடி வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இத்தகைய சூழலில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூரில் கடந்த 8 ஆம் தேதி குடிநீர் தேடி பெண் யானை ஒன்று அப்பகுதிக்கு வந்துள்ளது. அச்சமயத்தில் அங்குள்ள குழியில், இந்த பெண் யானை தவறி விழுந்துள்ளது. இதனால் உடல்நலம் குன்றிய பெண் யானை உயிருக்குப் போராடி வந்தது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பின்னர் மருத்துவ குழுவினருடன் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் உடல்நலம் குன்றிய பெண் யானைக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் யானைக்கு உணவாக பசுந்தீவனம் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை கொடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி என்ற இடத்தில் உடல்நலக்குறைவால் நடக்க முடியாமல் படுத்த 45 வயது மதிக்கத்தக்க பெண் யானைக்கு வனத்துறையினர் நேற்று (11.04.2024) சிகிச்சை அளித்தனர். மேலும் பெண் யானையின் குட்டி பாதிக்கப்பட்ட யானையின் பக்கத்திலேயே பரிதவித்து நின்று கொண்டிருந்தது பார்ப்போர் மனதையும் கலங்க செய்தது.

இந்நிலையில், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள தீனம் பாளையத்தில் ஒரே நேரத்தில் 15 காட்டு யானைகள் கிராமத்திற்குள் நுழைந்தன. இதனால் அப்பகுதி கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். இந்த காட்டுயானைகள் அங்குள்ள விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வந்தன. இதனைக் கண்காணித்து வந்த வனத்துறையினர் 15 காட்டு யானைகளையும் வனப்பகுதிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இனையத்தில் பரவி வைரலாகி வருகிறது. 

Next Story

பெண் யானைக்கு உடல்நலக் குறைவு; பரிதவிக்கும் குட்டி!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Female elephant ill health Poor kid

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மேற்குத்தொடர்ச்சி வனப்பகுதியில் கோடைக் காலத்தையொட்டி கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் கடந்த 8 ஆம் தேதி குடிநீர் தேடி பெண் யானை ஒன்று அப்பகுதிக்கு வந்துள்ளது. அச்சமயத்தில் அங்குள்ள குழியில், இந்த பெண் யானை தவறி விழுந்துள்ளது. இதனால் உடல்நலம் குன்றிய பெண் யானை உயிருக்குப் போராடி வந்தது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பின்னர் மருத்துவ குழுவினருடன் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் உடல்நலம் குன்றிய பெண் யானைக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் யானைக்கு உணவாக பசுந்தீவனம் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை கொடுக்கப்பட்டன.

இந்நிலையில் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி என்ற உடல்நலக்குறைவால் நடக்க முடியாமல் படுத்த 45 வயது மதிக்கத்தக்க பெண் யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் பெண் யானையின் குட்டி பாதிக்கப்பட்ட யானையின் பக்கத்திலேயே பரிதவித்து நின்று கொண்டுள்ளது பார்ப்போர் மனதையும் கலங்க செய்கிறது.