Skip to main content

ஆத்தூர் பள்ளி சிறுமி கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு!: மாணவியின் சகோதரி 

Published on 01/11/2018 | Edited on 01/11/2018
Sister Protest


ஆத்தூர் அருகே, 14 வயது சிறுமி கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், காவல்துறையினர் உரிய விசாரணை நடத்திட வேண்டும் என்றும் சிறுமியின் சகோதரி கூறியுள்ளனர்.
 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி தெற்கு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சாமிவேலு & சின்னப்பொண்ணு தம்பதியின் மகள் ராஜலட்சமி (14). கடந்த 22ம் தேதியன்று இரவு வீட்டில் தாயாருடன் பூக்கட்டிக் கொண்டிருந்த சிறுமி ராஜலட்சுமியை, வீடு அருகே வசிக்கும் தினேஷ்குமார் (25) என்ற வாலிபர் கொடுவாளால் கழுத்தை அறுத்து படுகொலை செய்தார்.


இந்த சம்பவம் தொடர்பாக தினேஷ்குமாரை கைது செய்த ஆத்தூர் டவுன் போலீசார், அவர் மீது கொலை, ஆபாசமாக பேசுதல், வன்கொடுமை தடுப்புச்சட்டம், போக்சோ சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அக். 24ம் தேதியன்று, தினேஷ்குமாரை 15 நாள் விசாரணை கைதியாக சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
 

இந்நிலையில், சிறுமி கொலை வழக்கை காவல்துறையினர் விரைவாக விசாரணை நடத்த வேண்டும்; பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும்; தாழ்த்தப்பட்டவர்கள் மீது தொடர்ந்து நடந்து வரும் தாக்குதலை தடுத்து நிறுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (அக்டோபர் 31, 2018) ஆர்ப்பாட்டம் நடந்தது.


மாநில துணை பொதுச்செயலாளர் சிவஞானம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. டிஒய்எப்ஐ, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் கலந்து கொண்டனர். சிறுமியைக் கொன்ற குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று முழக்கமிட்டனர். மேலும், சாதி ரீதியிலான தாக்குதலை தடுத்திட அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கண்டனம் தெரிவித்தனர்.


ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிறுமி ராஜலட்சுமியின் சகோதரி அருள்ஜோதி கூறுகையில், ''இந்த வழக்கில் தினேஷ்குமார் மட்டும் குற்றவாளி அல்ல. அவருடைய மனைவி சாரதா, தம்பி சசிகுமார் ஆகியோருக்கும் தொடர்பு இருக்கிறது. ஆனால் அவர்களிடம் இதுவரை காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தவில்லை. அவர்களையும் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும். இந்த கொலை நடந்து பல நாள்கள் ஆன நிலையில், இதுவரை மாவட்ட ஆட்சியர் எங்கள் பகுதிக்கு வந்து பார்வையிடவில்லை,'' என்றார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Next Story

‘போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை’ - பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
School Education Department takes action on Action against the protesting teachers

தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள், தங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். அதில் குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர்களின் இந்த போராட்டம், பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை நடந்தது. இதனையடுத்து, தமிழக அரசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. 

இந்த நிலையில், 19 நாள்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியதாவது, ‘சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 8, 2024 வரை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். 

அதில், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 19 நாள்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். மேலும், 19 நாள்களுக்கு உரிய ஊதியம் மற்றும் பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. .