ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - வாக்கு இயந்திரங்கள் சரிபார்ப்புப் பணிகள்!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக கொண்டுவரப் பட்டிருக்கும் வாக்கு எந்திரங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் வரும் திங்கள்கிழமை டிசம்பர் 4ஆம் தேதியோடு நிறைவடைகிறது.
இந்தத் தேர்தலுக்கான வாக்கு இயந்திரங்கள் புளியந்தோப்பு பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளிக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்நிலையில், தேர்தல் அதிகாரிகள் தலைமையில் வாக்கு இயந்திரங்களை சரிபார்க்கும் வேலை நடைபெற்று வருகிறது.
![](/UltimateEditorInclude/UserFiles/Newsphoto-2017/DECEMBER/2/Vaakku.jpg)
படங்கள் - குமரேஷ்