Skip to main content

அரசு மருத்துவமனைகளில் புதிய ஆர்.எம்.ஓ.,க்கள் நியமனம்

Published on 03/07/2023 | Edited on 03/07/2023

 

nn

 

கிருஷ்ணகிரி, சேலம், கோவை அரசு மருத்துவமனைகளுக்கு புதிய உள்தங்கு மருத்துவ அலுவலர்களை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

 

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவு மருத்துவராக பணியாற்றி வந்த செல்வராஜ், அதே மருத்துவமனையில் உள்தங்கு மருத்துவ அலுவலராக (ஆர்எம்ஓ) நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இயன்முறை மருத்துவம் மற்றும் மறுவாழ்வு பிரிவு உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த ஸ்ரீலதா, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆர்எம்ஓவாக நியமிக்கப்பட்டுள்ளார்.  

 

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆர்எம்ஓ ஆக பணியாற்றி வந்த மருத்துவர் பொன்முடிசெல்வன் ஓய்வு பெற்றதை அடுத்து, அந்தப் பணியிடத்திற்கு மருத்துவர் சரவணபிரியா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஏற்கனவே இதே மருத்துவமனையில் தடயவியல் மருத்துவப் பிரிவு போதகராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்