Skip to main content

'நீல புரட்சியில் சவால்களும் நம்பிக்கையும்' -அண்ணாமலை பல்கலைக்கழக கருத்தரங்கம்

Published on 06/02/2019 | Edited on 06/02/2019

 

annamalai university


அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கடல் அறிவியல் புலத்தில் கடல்வாழ் உயிரியியல் உயராய்வு மையம் பரங்கிப்பேட்டையில் உள்ளது. இதில் நீல புரட்சி மாற்றத்தில் சவால்களும், நம்பிக்கையும்  என்ற தலைப்பில் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையின் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் அறிவியலை மேம்படுத்துதல் திட்டத்தின் நிதியுதவியுடன் மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கம் பிப்ரவரி 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடைபெறுகிறது.

இதன் முதல்நாள் துவக்கவிழாவில்  உயராய்வு மையத்தின் முதல்வர் சீனிவாசன் விழாவில் கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்றார். கொல்கத்தாவிலுள்ள இந்திய விலங்கியல் ஆய்வு மைய இயக்குநர்  கைலாஷ்சந்திரா கருத்தரங்கை துவக்கி வைத்து மாணவர்களிடம் பேசுகையில், இந்த கருத்தரங்கம் கடல் வாழ் உயிரினங்களின் அனைத்து முன்னேற்றங்களையும், சமீப காலங்களில் மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்புகளைப் பற்றிய தகவல் தொடர்பானது. இதனை மாணவர்கள் நன்கு அறிந்து மீனவர்கள் மற்றும் கடலை சார்ந்து வாழும் மக்களிடம் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள்விடுத்தார்.

அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தின்  துணைவேந்தர் முருகேசன் விழாவிற்கு தலைமை வகித்து உரையாற்றுகையில், கடல் உயிரியியல் மற்றும் உயிர்தொழில்நுட்பப் பகுப்பிலுள்ள ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு விளக்கி கூறினார். மேலும் பனிரெண்டாம் வகுப்பு முடித்து மீன் வளர்ப்பு படிப்பில் சேரும் மாணவர்களுக்கு கடல் சார்ந்த அரசு மற்றும் தனியார் துறையில் வேலை வாய்ப்பு அதிகம் உள்ளது. அதேபோல் அவர்கள் சுயதொழில் தொடங்கினால் அதிகளவு வருமானம் பெறவும் வாய்ப்புள்ளது என்றார்.

இக்கருத்தரங்கில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இந்திய விலங்கியல் ஆய்வு மையம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் பலன் கிடைக்கும்.  இதில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த, மீன்வள ஆய்வியல் மைய முதன்மை விஞ்ஞானி சிவகுமரன், சென்னை செட்டிநாடு பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியன், அறிவியல் புல முதல்வர் கபிலன்  ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு கடலில் கிடைக்கும் பொருட்களை கொண்டு எவ்வாறு நீலப்புரட்சியின் பொருளாதரத்தை மேம்படுத்தலாம் என்று விளக்கிகூறினார்கள்.

இந்த கருத்தரங்கில் சீனா, இலங்கை, ஆஸ்திரேலியா, பிரான்ஸ்  உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள் தொழில்நுட்ப ஆய்வில் தங்களின் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை வழங்கினார்கள். இந்திய விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்றனர்.  உயராய்வு மைய இணைபேராசிரியர் சோமசுந்தரம் நன்றி கூறினார். முன்னதாக கருத்தரங்கு மலரை துணைவேந்தர் முருகேசன் வெளியிட அதனை செட்டிநாடு பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் பெற்றுகொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பாலியல் சமத்துவ பயிற்சி பட்டறை

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Gender Equality Workshop at Annamalai University

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து பாலியல் சமத்துவத்தைப் பற்றிய 3 நாட்கள் பயிற்சி பட்டறை பல்கலைக்கழக மக்களியல் துறையில் நடைபெற்றது. மக்களியல் துறை உதவிப் பேராசிரியர் க. மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். கலைப்புல தலைவர் விஜயராணி தலைமை தாங்கிப் பேசினார். துறைத் தலைவர் ரவிசங்கர் பயிற்சி பட்டறை பற்றிய தொகுப்பு உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆளவை மன்ற உறுப்பினர் பேராசிரியர் அரங்க பாரி, ராஜீவ்காந்தி தேசிய மேம்பாட்டு நிறுவனத்தின் பேராசிரியர் வசந்தி ராஜேந்திரன், சிதம்பரம் வட்டாட்சியர் ஹேமா ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்குப் பாலியல் சமத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ - மாணவியர்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரி மாணவ - மாணவியர்கள் 100 பேர் கலந்து கொண்டனர். மக்களியல் துறை இணைப் பேராசிரியர் பீமலதா தேவி நன்றியுரை வழங்கினார்.

Next Story

‘மீண்டும் கல்லூரிக்குப் போகலாம்’ - குடும்பத்தினருடன் பொன்விழாவைக் கொண்டாடிய முன்னாள் மாணவர்கள்!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Ex-students who celebrated Golden Jubilee with their families at annamalai university

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 1970 முதல் 1974 ஆம் ஆண்டில் வேளாண் கல்லூரியில் 45 மாணவர்கள் பயின்றனர். கல்வி பயின்ற பிறகு அவர்கள் மத்திய - மாநில அரசின் பல்வேறு துறைகளில் வங்கி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட  பல்வேறு துறைகளில் பணியாற்றி பணி நிறைவு பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, ‘AU74 அக்ரி பட்டதாரிகள் சங்கம்’ என்ற சங்கத்தை அமைத்து,  அரசுப் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர். மேலும் அவர்கள், பல்வேறு கல்லூரிகளில் பயிலும் வேளாண் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகின்றனர்.

இவர்கள் கல்வி பயின்று 50 ஆண்டுகள் கடந்த நிலையில், குடும்பத்தினருடன் இணைந்து 50 ஆம் ஆண்டு பொன்விழாவை (1974 - 2024) பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் கொண்டாடினார்கள். இவ்விழாவுக்கு சங்கத்தின் தலைவர் அக்ரி நடராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராகப் பல்கலைக்கழக துணைவேந்தர் இராம. கதிரேசன் கலந்துகொண்டு, முன்னாள் மாணவர்களை பாராட்டி பொன்விழா ஆண்டு மலரை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.

இதில் பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேலு,  தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், வேளாண் புல தலைவர் அங்கயற்கண்ணி மற்றும் 1974 ஆம் ஆண்டுகளில் மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவித்த முன்னாள் பேராசிரியர்கள் பாலசுப்ரமணியன், கோவிந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டு முன்னாள் மாணவர்களைப் பாராட்டி மலரும் நினைவுகளை நினைவுகூர்ந்து வாழ்த்தினார்கள்.

Ex-students who celebrated Golden Jubilee with their families at annamalai university

மேலும், அங்கு பயின்ற முன்னாள் வேளாண் மாணவர்கள் வேளாண் கல்லூரிக்கு, சங்கத்தின் சார்பாக ரூ. 3 லட்சம் செலவில் உபகரணங்கள், அறைகள் புதுப்பித்தல் போன்ற உதவிகளைச் செய்வதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து குடும்பத்துடன் அனைவரும் ஆட்டம் பாட்டத்துடன் மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, ‘50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை குடும்பத்துடன் சந்தித்த நிகழ்வு மறக்க முடியாத ஒன்றாக உள்ளது’ என்று கூறினார்கள்.