Skip to main content

கூட்டணிக்கு வியூகம் வகுத்த அமித்ஷா! - ஆன்மீக அரசியலில் ரஜினியின் அடுத்த மூவ்!

Published on 11/07/2018 | Edited on 11/07/2018
raji ami


டார்ஜிலிங்கில் படப்படிப்பை முடித்து, சென்னை திரும்பிய ரஜினிகாந்த் மீண்டும், தனது ஆன்மீக அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, 2019-ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற தமிழகத்தில் வியூகம் வகுப்பதற்காக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சென்னை வருகை தந்தார். அப்போது கட்சி நிர்வாகிகளுடன் கூட்டணி குறித்த ரகசிய ஆலோசனையையும் மேற்கொண்டார்.

 

 

இதையடுத்து, இரவு நடந்த பாஜக உயர்மட்டக்குழு மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமித்ஷா, இந்தியாவில் தமிழகத்தில் ஊழல் அதிகம் உள்ளது. தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக மற்ற கட்சிகளை விட பாஜக நிறைய செய்துள்ளது. தமிழகத்தில் பாஜக பெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

ஊழல் இல்லாத கட்சியுடன் தமிழகத்தில் பாஜக கூட்டணி வைப்போம். செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் கூட்டணி அமைப்பது குறித்து பேசவுள்ளோம் என அவர் கூறினார்.
 


அமித்ஷாவின் பேச்சு முழுவதும், ’இந்தியாவிலே தமிழகத்தில் தான் அதிக ஊழல் நடைபெறுகிறது, அதனால் ஊழல் இல்லாத கட்சியுடன் தான் கூட்டணி’என ஊழல் குறித்தே இருந்தது. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்து வரும் அதிமுக ஆட்சியின் மீதும் பாஜகவுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என்பதை வெளிப்படையாக காட்டியுள்ளது.

மேலும், மத்திய அரசுடன், மாநில அரசு இணக்கமாக இருப்பதாக கூறப்பட்டாலும் கூட, நடந்து வரும் ஆட்சியை பெருமைப்படுத்தும் விதமாக ஒரு சில வார்த்தைகள் கூட அவர் பேசவில்லை என்பதே உண்மை.

மாறாக தமிழகத்தில் நடந்து வரும் ஆட்சியை கடுமையாக சாடும் விதமாகவே அமித்ஷாவின் பேச்சு இருந்தது என பரவலாக பேசப்படுகிறது. இதன் மூலம் அவர் அதிமுக, திமுகவுடன் கூட்டணி வைக்க துளியும் விரும்பவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

ஆனாலும், தமிழகத்தில் பாஜக பெரும் வெற்றி பெறும், தமிழக கட்சிகளுடன் கூட்டணி என்பதை அழுத்தமாக கூறுவதன் மூலம் அவர்கள் ரஜினியின் அரசியல் வருகையை தான் முழுவதும் நம்புவதாக தெரிகிறது. மேலும் இவர்களின் கொள்கைக்கு இணங்க ரஜினியும் ஆன்மீக அரசியலே தனது நிலைப்பாடு என்பதை தெளிவாக கூறிவிட்டார்.

amith


இதனிடையே, ஒரு மாதத்திற்கு முன், புதிய படத்தின் படப்பிடிப்பிற்காக, டார்ஜிலிங் சென்ற ரஜினிகாந்த் படப்படிப்பை முடித்து, தற்போது மீண்டும் சென்னை திரும்பியுள்ளார். இதைதொடர்ந்து, அவர் தனது அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட திட்டமிட்டுள்ளார்.

 

 

ரஜினி மன்ற உறுப்பினர்கள் சேர்க்கை, 40 லட்சத்தை எட்டியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும், 70 சதவீத அளவுக்கு, பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு விட்டனர். 'டிவி' விவாதங்களில், யார் யார் பேச வேண்டும் என்பதற்காக, ஊடகவியல் தொடர்பாளர்கள் என்ற பொறுப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதற்கான நிர்வாகிகளை, விரைவில், ரஜினி அறிவிக்க உள்ளார். இதற்காக மாவட்ட வாரியாக மன்ற நிர்வாகிகளுடன் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

முன்னதாக, மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியில் படப்பிடிப்பை முடித்த ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்து கிளம்புவதற்கு முன்பு பேலூரிலுள்ள ராமகிருஷ்ணர் மடத்திற்கு சென்று தியானத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து, அந்த மடத்தின் தலைவர் ஸ்மரனாநந்தா மகராஜை சந்தித்து ஆசி பெற்று சென்னை திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.