Skip to main content

திமுகவை குற்றம்சாட்டிய அதிமுக வழக்கறிஞர்; கரோனா காலத்தில் கவனிக்க வேண்டியது பல உள்ளன என குறிக்கிட்டு கூறிய நீதிபதிகள்..!

Published on 20/05/2021 | Edited on 20/05/2021
AIADMK lawyer accuses DMK; Judges point out that there are many things to look out for during the Corona period

 

கரோனா நிவாரண உதவிகளை நேரடியாக வீடுகளுக்கே சென்று வழங்க உத்தரவிட கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அதிமுகவை சேர்ந்த தேவராஜ். இவர் தொடர்ந்த வழக்கில், தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால்  தமிழக அரசு கடந்த 10-ஆம் தேதி முதல் மாநில முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது. 

 

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சுமார் 2 கோடி 7 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு கரோனா நிவாரண நிதியாக தமிழக அரசு 4 ஆயிரம் ரூபாய் அறிவித்து  அதில் முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் கடந்த 15 ஆம் தேதி முதல் அனைத்து நியாய விலை கடைகள் மூலமாக  வழங்கப்பட்டு வருகிறது. கரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் அதிக அளவில் பொது வெளியில் கூட கூடாது என்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்து தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முந்தைய அரசால் நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கிய போது அரசியல் கட்சியினர் அரசு வழக்கும் நிதியில் தலையீடுவது, நியாய விலை கடைகளில் பதாகை வைப்பது, நிவாரண நிதியை வழங்கும் போது கட்சியின் பெயரையும் சின்னத்தையும் பயன்படுத்தக் கூடாது என்றும், ஆளும் கட்சியின் நிர்வாகிகள் இந்த நிகழ்வுகளில் எந்தவிதத்திலும் பங்கேற்கக் கூடாது எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. 

 

இந்த உத்தரவு தற்போதும் அப்படியே உள்ளது. இந்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் தற்பொழுது கரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்வுகளில் திமுகவினர் விதிமீறலில் ஈடுபட்டு வருகிறன்றனர். சென்னை ஆயிரம்விளக்கு, அண்ணா நகர் தொகுதிகளின் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களின் கட்சியை சேர்ந்த திமுக நிர்வாகிகளையும் கூட்டம் கூட்டமாக அழைத்துச் சென்று நியாய விலை கடைகளில் நிவாரண தொகையை வழங்கு வருகின்றனர். ராதாபுரம் திமுக சட்டமன்ற  உறுப்பினர் அப்பாவு தற்போது தமிழக சட்டமன்ற சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் . இவர் திசையன்விளை, பணகுடி உள்ளிட்ட ஊர்களிலுள்ள நியாய விலை கடைகளுக்கு திமுக நிர்வாகிகளை பெருங்கூட்டமாக அழைத்துச் சென்று பொதுமக்களுக்கு நிவாரண நிதி வழங்கியுள்ளார். இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த சபாநாயகர் அப்பாவுவை வரவேற்று திமுக சின்னம் கொடி பொறித்த பேனர்கள் உயர்நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் நியாயவிலை கடைகளுக்கு அருகே சாலையோரம் திமுகவினரால் வைக்கப்பட்டிருந்தது. 

 

AIADMK lawyer accuses DMK; Judges point out that there are many things to look out for during the Corona period

 

மேலும் போதிய சமூக இடைவெளியின்றி ஆளும்கட்சியினர் சபாநாயகருடன் நின்றபடி கரோனா நிதி வழங்கி வருகின்றனர். கரோனா நிதி வழங்கல் தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவினையும் அப்பட்டமாக மீறியுள்ளார். எனவே சமூக இடைவெளி, அரசு நீதி வழங்கும் நிகழ்வில் ஆளும் கட்சியினர் தலையீடு இல்லாம் இருக்க வேண்டும் நியாய விலை கடை அருகே ஆளும் கட்சியினர்  விளம்பர பலகை வைக்க தடை விதித்த உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும்  முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினமான ஜூன் மூன்றாம் தேதி முதல் அரிசி முதலான பொருட்களடங்கிய நிவாரண தொகுப்பு பை நியாயவிலை கடைகள் மூலம் வழங்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. அவ்வாறு வழங்கும்போது பொதுமக்கள் நியாய விலை கடைகளில் அதிக அளவில் கூடி கரோனா தொற்று மேலும் தமிழகத்தில் அதிக அளவில் பரவிடும் அபாயம் உள்ளது.  ஆகவே உயர் நீதிமன்றம் இதற்கு தடை விதிக்க வேண்டுமென்றும்,  இந்த நிவாரண பொருட்களை வீடு வீடாக சென்று ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வழங்கிட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். 

 

இந்த வழக்கு சென்னை உயர்நீதீமன்ற தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கரோனா நிவாரண நிதி வழங்கும் போது விதிமுறைகளை முழுமையாக  பின்பற்றவில்லை, நிவாரண நிதிக்காகன டோக்கன் வழங்கும் போது அரசியல் விழாவை போல ஆளும் கட்சியினர்  செயல்படுகின்றனர். நிகழ்ச்சியில் பலர் மாஸ்க் அணியாமல் விதிகளை மீறி செயல்பட்டதாகவும் உயர்நீதிமன்ற உத்தரவுகளை ஆளும் கட்சியிர் மதிக்காமல் உள்ளதாகவும் புகார் தெரிவித்தார். அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள், கரோனா காலத்தில் கவனம் செலுத்த வேண்டிய விசயங்கள் பல உள்ளன. நிவாரணம் வழங்குவதை அரசியலாக்க வேண்டாம்  என கருத்து தெரிவித்தனர். கரோனா விதிகளை பின்பற்றுவது தொடர்பாக  விதிகளை மீறுவது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த தமிழக அரசு தலைமை வழக்கறிஞர், நேரடியாக வீடுகளுக்கே சென்று வழங்குவது தொடர்பாக அரசின் கருத்தை அறிந்து விளக்கமளிப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து மனு தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணை திங்கள் கிழமைக்கு தள்ளிவைத்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

தண்ணீர் தட்டுப்பாடு ; தாக்குபிடிக்குமா 'சென்னை'

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Water scarcity; Attacking 'Chennai'

கோடைகால வெயிலின் தாக்கம் தீவிரமடைந்திருக்கும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசும் மேற்கொண்டு வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீர்ச்சத்து குறைபாட்டை தடுக்கும் உப்பு சர்க்கரை கரைசல் எனும் ஓ.ஆர்.எஸ் கரைசலை ஆயத்தமாக வைத்திருக்க தமிழக சுகாதாரத்துறைக்கு அரசு அறிவுறுத்தல் கொடுத்துள்ளது. 

கோடை காலங்களில் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வெயிலின் தாக்கத்தை தனித்து கொள்வதற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றைத் தாண்டி மூன்றாவது காரணியாக பார்க்கப்படுவது குடிநீர் தட்டுப்பாடு. சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம் நடத்துவது போன்ற செய்திகள் தென்படுவதே இதற்கான சான்று. அதேபோல் கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டை அதிகம் கையாளும் இடமாக சென்னை உள்ளது. பல்வேறு ஏரிகளில் உள்ள நீர் இருப்பை நம்பியே சென்னையின் குடிநீர் தட்டுப்பாடு நீக்கப்பட்டு வருகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் மிக முக்கியமான ஏரி புழல் ஏரி. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. தற்போது புழல் ஏரியில் இருக்கும் நீரின் அளவு 2,942 மில்லியன் கன அடி ஆகும். வினாடிக்கு 570 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 217 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அடுத்து சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சோழவரம் ஏரி. 1,080 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் தற்போது 118 மில்லியன் கன நீர் மட்டுமே உள்ளது. தற்போது நீர்வரத்து இல்லாத நிலையில் சோழவரம் ஏரியில் இருந்து 168 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  அடுத்தது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை குடிநீர் தேவையில் முக்கிய பங்காற்றுகிறது. மொத்தம் 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் தற்போது நீர் இருப்பு 2,384 மில்லியன் கன அடியாக இருக்கிறது. நீர்வரத்து இல்லாத நிலையில் வினாடிக்கு 46 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சென்னையின் அடுத்த குடிநீர் ஆதாரம் பூண்டி ஏரி. 3,231 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நீர் இருப்பு 978 மில்லியன் கன அடியாக உள்ளது. இந்த ஏரிக்கும் நீர்வரத்து இல்லாத நிலையில் வினாடிக்கு 525 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டு காணப்படும் நிலை இருக்கிறது. 1,475 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நீர் இருப்பு கணக்கிட முடியாத அளவிற்கு மிகவும் குறைவாக இருக்கிறது. வீராணம் ஏரியில் நீர்வரத்தும் இல்லை நீர் வெளியேற்றமும் இல்லாத சூழ்நிலை இருக்கிறது.

இப்படி மொத்தமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.75 டிஎம்சி ஆக இருக்கிறது. இதில் வீராணம் ஏரி முற்றிலும் வறண்டு விட்ட நிலையில் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் உள்ளிட்ட ஏரிகளில் தற்பொழுது 6.88 டிஎம்சி நீர் மட்டுமே இருக்கிறது. வரும் கோடை காலத்தில் இந்த அளவு தண்ணீரே சென்னையின் குடிநீர் பிரச்சனையை தீர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.