Skip to main content

அதிமுக - பாஜக கூட்டணி கட்டாயக்கல்யாணம் :புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

Published on 05/03/2019 | Edited on 05/03/2019

 

    தமிழகத்தில் அதிமுகவுடன், பாஜக கூட்டணி வைத்திருப்பது விருப்பத்திற்கு மாறான கட்டாயக்கல்யாணமே என அதிர வைத்துள்ளார் புதுச்சேரியின் முதல்வரான நாராயணசாமி.

 

n

   

 ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த புதுச்சேரி முதல்வர் தரிசனத்திற்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்தவர், "  பாஜக அரசு 5 ஆண்டுகளில் தமிழக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அத்துடன் அதிமுக- பாஜக அமைத்துள்ள கூட்டணி என்பது விருப்பத்திற்கு மாறானக் கட்டாய கல்யாணம் போன்றது. 

 

பாஜக அனைத்திந்திய முன்னேற்றக் கழகத்தை வற்புறுத்தி கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. மனப்பூர்வமாக கூட்டணி சேர்வதற்கு அதிமுகவிற்க்கு விருப்பம் இல்லை. அதிமுக அரசின் பின்புலத்தை வைத்து கொண்டு மோடி அதிமுக ஆட்சியை ஆட்டிப்படைக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்." என தெரிவித்து அதிரவைத்தவர், " பாஜகவின் "பி" அணியாக அதிமுக செயற்படுகின்றது என தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் தெரிவிக்கின்றனர்." எனவும் தெரிவித்தார். 

 

n


 இதனையடுத்து, " பாகிஸ்தானுக்கு அனைத்து நாடுகளும் அழுத்தம் கொடுத்ததுடன் பிரான்ஸ், ஐநா சபைக்கு இந்த பிரச்சினையை கொண்டு வந்ததால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விமான வீரரை விடுதலை செய்தார்.  இதை தனி ஒரு நபர் என்று பெருமை கொள்ளக்கூடாது என தெரிவித்ததுடன் மோடியின் திட்டம் என்னவென்றால் இந்தப் போரைக் காரணம் காட்டி தேர்தலை சந்திக்கலாம் என நினைத்தார். ஆனால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பஞ்சர் ஆக்கி விட்டார்." என உற்சாகமாக புறப்பட்டார் அவர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.