Skip to main content

மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய நடிகர் ரஜினி.. (படங்கள்) 

Published on 12/07/2021 | Edited on 12/07/2021

 

நடிகர் ரஜினிகாந்த் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தான் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அவர், தனது சினிமா பணியில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன் வழக்கமான உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்ற அவர்,  இரண்டு தினங்களுக்கு முன் சென்னை திரும்பினார். இந்நிலையில், நேற்று (11.07.2021) அவர் தரப்பிலிருந்து, ரஜினி தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை திங்கள்கிழமை சந்திக்க உள்ளார் எனும் தகவல்கள் வெளியாகின. இதனால், மீண்டும் அவர்களது ரசிகள் மத்தியிலும் மன்ற நிர்வாகிகள் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டது.

 

அதேபோல், இன்று காலை மன்ற நிர்வாகிகளை சந்திக்க ரஜினி கிளம்பினார். அதற்கு முன்னதாக அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பின்போது, தான் அரசியலுக்கு வருவேனா மாட்டேனா என்று ரசிகள் மத்தியிலும், மன்ற நிர்வாகிகள் மத்தியிலும் கேள்வி உள்ளது. அதற்காக இந்த ஆலோசனைக் கூட்டம் என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினி சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் தான் அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று முடிவுசெய்து தெரிவித்துள்ளார். அவரது வருகைக்காக அவரது ரசிகர்கள் ராகவேந்திரா மண்டபத்தின் வெளியே கூடியிருந்தனர். அவர் வருகையின்போது, அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Next Story

“அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்!”- ரஜினிகாந்த்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Rajinikanth has said that he will not answer political questions

வேட்டையன் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரும் திரைப்படமான வேட்டையன் படப்பிடிப்பு, ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள, சென்னையிலிருந்து விமானம் மூலம் கடந்த 9ஆம் தேதி ஹைதராபாத் புறப்பட்டார். 75 சதவீத படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

“படப்பிடிப்பு நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது..” என்று மீடியாக்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தபோது, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு  “அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்..” என்று கூலாகச் சொல்லிவிட்டு கிளம்பினார்.