Skip to main content

அதிரடி கிளப்பும் எஸ்.ஐ. - கஞ்சா வியாபரிகள், கிரிமினல் பேர்வழிகள் ஓட்டம்

Published on 27/02/2019 | Edited on 27/02/2019

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி காவல் நிலைய எஸ்.ஐ. அகிலன் சில தினங்களுக்கு முன்பு பணி மாறுதலில் இங்கு வந்து சேர்ந்தார். திட்டக்குடி காவல்நிலையத்தில் பணிக்கு சேர்ந்த நாள் முதல் கஞ்சா வியாபரிகள் மற்றும் தொடர் கிரிமினல் பேர்வழிகளை கையும் களவுமாக பிடித்து வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பி வருகிறார். அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்த திட்டக்குடி பாலாஜி, மணிகண்டன் ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்து வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பியுள்ளார்.

 

SI


திட்டக்குடி காவல் நிலைய இன்ஸ்பெக்டராக உள்ள ஸ்ரீபிரியா, அகிலனின் அதிரடி பணிக்கு மிகவும் உறுதுணையாக இருந்து வருகிறார் என்று காவல்நிலைய போலுசார் தெரிவிக்கின்றனர். அகிலன் இதற்கு முன்பு எ.வா.கோட்டை, கருவேப்பிலங்குரிச்சி, சிதம்பரம், திருநாவலூர், திருவெண்ணைநல்லூர், மணலூர்பேட்டை, விக்கிரவாண்டி, எடக்கல் ஆகிய காவல் நிலையங்களில் சிறப்பாக பணியாற்றி அதிகாரிகளிடமும் பொதுமக்களிடமும் பாராட்டை பெற்றவர்.

சார்ந்த செய்திகள்

Next Story

 புதுக்கோட்டை மாவட்டத்தில் 41 எஸ்.ஐ கள் பணியிடமாற்றம்!

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
41 sub inspector transfer in Pudukkottai district!

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில் இந்தியா முழுவதும் தேர்தல்களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணி செய்து வரும் வருவாய் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

ad

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியில் உள்ள காவல் உதவி ஆய்வாளர்கள் 41 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

Next Story

மது போதையில் அட்டகாசம்; ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் மனைவி மீது தாக்குதல்

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

Intoxicated youth beaten wife of retired sub-inspector

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கீழ் காங்கேயன் குப்பம் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் புகழேந்தி(61). இவர் காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர் ஆக இருந்து ஓய்வு பெற்று, தற்போது இவர் அப்பகுதியில் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான அய்யனார் கோவிலில் இரவு காவலராக பணி செய்து வருகிறார்.

 

இவர் கடந்த 11ஆம் தேதி இரவு அவரும் அவரது மனைவியும் வழக்கம் போல் கோவிலைப் பூட்டிவிட்டு வீட்டுக்கு புறப்படுவதற்கு தயாராக இருந்தனர். அப்போது கோவில் மின்சார விளக்குகளை அணைத்த போது, கோயில் கருவறை பின்புறம் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த விமல்ராஜ்,சதீஷ், தயாநிதி, துரை, ஆகியோர் காவலர் புகழேந்தியை தகாத வார்த்தைகளால் திட்டி எதற்கு கோவில் லைட்டை நிறுத்துகிறாய் நாங்கள் மது குடிப்பதற்கு வெளிச்சம் வேண்டும் என்று கூறியுள்ளனர்.

 

கோவிலுக்குள் இது போன்ற அருவருப்பான செயல்களை செய்யக்கூடாது என புகழேந்தியும் அவரது மனைவியும் கூறியுள்ளனர். அப்போது மேற்படி நால்வரும் அருவருப்பான வார்த்தைகளால் திட்டியபடி புகழேந்தியை தாக்கியுள்ளனர். இதைக் கண்டு பதறிப்போன அவரது மனைவி அவர்களிடம் இருந்து தனது கணவரை தடுத்து மீட்பதற்கு போராடி உள்ளார். அப்போது பெண் என்று பாராமல் அவரது சேலையையும் பிடித்து இழுத்து அவர் மீதும் தாக்குதல் தாக்கியுள்ளனர் அவர்களிடம் இருந்து இருவரும் தப்பி ஓடி முத்தாண்டி குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்களின் புகாரின் பேரில், காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன், முத்தாண்டி குப்பம் சப் இன்ஸ்பெக்டர் சாந்தா ஆகியோர் வழக்கு பதிவு செய்து கோவில் காவலராக பணி செய்யும் புகழேந்தி மற்றும் அவரது மனைவியை தாக்கிய விமல்ராஜ் உட்பட நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்வதற்காக, தீவிரமாக தேடி வருகின்றனர்.