Skip to main content

ஆவடி அருகே 4 வயது சிறுமி பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மற்றுமொருவர் கைது!!

Published on 28/06/2019 | Edited on 28/06/2019

 

சென்னையை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலில் 4 வயது சிறுமி குளியலறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டது ஊர்ஜிதமாகிய நிலையில் முன்னாள் ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் எனும் கொடூரம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவத்தில் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.  

 4-year-old girl sexual abuse near Avadi;The other was arrested!


சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் அந்தோணியார் தெருவைச் சேர்ந்தவர் தனியார் தொழிற்சாலைஊ ழியரரான ராஜேந்திரன்.  இவரது நான்கு வயது மகள் சன்மதி வீட்டின் குளியலறையில் சடலமாக மீட்கப்பட்டார். மாலையில் இருந்தே சன்மதியை காணவில்லை என உறவினர்களும், பெற்றோர்களும் தேடிவந்த நிலையில் வீட்டில் குளியலறையில் 4 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

 4-year-old girl sexual abuse near Avadi;The other was arrested!


இதுதொடர்பாக திருமுல்லைவாயில் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்ததை அடுத்து சிறுமியின் உடலை மீட்ட காவல்துறையினர் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்த நிலையில் சிறுமியின் வீட்டின் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் அந்த குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து குளியல் அறையில் கொலை செய்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. மேலும் அந்த சிறுமியின் கம்மல், சிகை போன்றவை அந்த கொடூரனின் படுக்கையில் இருந்து கைப்பற்றப்பட்டது, மேலும் அவனது வீட்டு கழிவறை சற்றுமுன் பினாயிலால் கழுவப்பட்டிருந்ததும் சந்தேகத்தை ஏற்படுத்த போலீசார் துருவி துருவி நடத்திய விசாரணையில் மீனாட்சி சுந்தரம் சிக்கினான். 

அவனுக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மீனாட்சி சுந்தரம் அவனது  மருமகளிடமே தவறாக நடந்துகொள்ள முயன்றதால் அவர் தனிக்குடித்தனம் போனதாகவும் கூறப்படுகிறது. அவனது கொடூர காமம் அந்த சிறுமி மீது திரும்பி இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியிருப்பது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவன் மட்டுமின்றி இந்த வழக்கில் அவனது மனைவியையும் போலீசார் கைது செய்துள்ளனர். இறந்த அந்த சிறுமியின் உடலை மறைத்து வைக்க அவரது மனைவி ராசாத்தியம்மாள் உதவியதாக அவன் விசாரணையில் தெரிவிக்க கொலையை மறைக்க உதவிய குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.    

 

 

சார்ந்த செய்திகள்