Skip to main content

நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்.. 2 மீனவர்கள் சடலமாக மீட்பு... மாயமான மீன்வர்களை தேடும் பணி தீவிரம்...

Published on 21/01/2021 | Edited on 21/01/2021

 

2 fishermen rescued as dead bodies Intensive search for two fishermen ...

 

2 நாட்களுக்கு முன்னர் தமிழக மீனவர்களின் படகை இலங்கை கடற்படையினர் மூழ்கடித்ததில், 4 மீனவர்களின் உயிர் பறிபோனது. இதில் 2 பேரது சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 2 பேரின் நிலைமை தெரியாமல், கலங்கி நிற்கின்றனர் உறவினர்கள். இறந்தவர்களின் சடலத்தை இந்தியாவில் பிரேத பரிசோதனை செய்து, இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

 

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடந்த 18ஆம் தேதி 214 விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன. இதில் ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஆரோக்கிய சேசு என்பவருக்கு சொந்தமான படகில், மெசியா(30), தங்கராஜ்(52), ஷாம்(28), செந்தில்குமார்(32), ஆகிய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். 

 

அப்போது, அந்தப் பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை விரட்டி அடித்துள்ளனர். இதனால், அவசர அவசரமாக மீனவர்கள் கரை திரும்பினர். அப்போது, எதிர்பாரதவிதமாக இலங்கையின் ரோந்து கப்பல் மீது, ஆரோக்கிய சேசுவின் படகு மோதியது. இதில், ரோந்து கப்பலின் ஒரு பகுதியில் லேசான சேதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த இலங்கை கடற்படையினர், மீண்டும் மீண்டும் ரோந்து கப்பலால் படகை மோதச் செய்திருக்கின்றனர். 

 

இந்தச் சம்பவத்தில் பலத்த சேதமடைந்த படகு, சிறிது நேரத்தில் மூழ்கத் தொடங்கியது. உடனடியாக சக மீனவர்களை வாக்கி - டாக்கியில் அழைத்து உதவி கோரி இருக்கின்றனர் படகில் இருந்த 4 மீனவர்களும். ஆனால், அதே பகுதியில் இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் முகாமிட்டிருந்ததால், சக மீனவர்களால், அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை.

 

இதுகுறித்து ராமேஸ்வரம் மீனவர் ஒருவரிடம் பேசினோம். “இந்த கரோனா காலத்தில் சரியா தொழில் பண்ண முடியவில்லை. அதுக்குப் பிறகு இப்பத்தான் 4 கடல் (4 முறை மீன்பிடிக்க) போயிருக்கோம். 40 பேரை இலங்கை கடற்படை சிறைபிடிச்சிருச்சு. இதைக் கண்டிச்சு 2 வாரம் வேலை நிறுத்தம் செஞ்சோம். ஆனால், பலன் ஏதும் கிடைக்கவில்லை. 

 

இதுக்கு இடையில் கோட்டைபட்டினத்தில் இருந்து சென்ற எங்க ஊர் மீனவர்கள் 4 பேரை அடித்தே கொன்று, படகோட மூழ்கடிச்சிட்டாங்க. இப்போ, 2 பாடியை எடுத்திருப்பதாக கணக்கு காட்டுறாங்க. இனி 4 நாள் கழிச்சி 2 பாடியை கணக்கு காட்டுவாங்க. இத்தனைக்கும் நம்ம எல்லை பகுதியில்தான் இந்தச் சம்பவம் நடந்திருக்குது. இப்படி செஞ்சா எப்படி தொழில் பண்ண முடியும்?” என்றார் ஆற்றாமையோடு.

 

சில நாட்களுக்கு முன்னர் இலங்கை மீனவர்கள் மத்தியில் பேசிய அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, “தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில் மீன்பிடித்தால், அவர்களைப் படகோடு சிறைப்பிடித்து, என்னிடம் கொண்டு வாருங்கள். எத்தனை வழக்கு வந்தாலும் நான் சந்திக்க தயார்” என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.