Skip to main content

7030 ஆசிரியர்களுக்கு 17 (பி) விளக்க நோட்டிஸ்!!

Published on 27/01/2019 | Edited on 28/01/2019

ஜாக்கோ – ஜியோ வின் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து 4 நாட்கள் நடந்த போராட்டத்தில் பலர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு முழுவதும் 420 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் குடியரசு தினத்தில் அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் கொடி ஏற்றினார்கள்.

 

ஆனால் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்பதால் போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுமுறை நாளிலும் ஒவ்வொரு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு 17 (பி) விளக்க நோட்டிஸ் அனுப்பும் பணி தொடங்கி நடந்தது.

 

 1730 (B) to explain  notice to 7030 teachers !!

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 4216 ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி, முதுகலை பட்டதாரி, வட்டார வளமைய பயிற்றுனர்கள் என்று 2814 ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை என்றும் அவர்கள் பணிக்கு வராமைக்காண விளக்கம் கேட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் 17(பி) நோட்டிஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டிஸ்கள் எந்த வழியில் ஆசிரியர்களை சென்றடையும் என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில் 28 ந் தேதி மாலைக்குள் பதில் கிடைக்காத நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

 

இந்த நிலையில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு கடந்த 3 நாட்களாக விண்ணப்பங்கள் வாங்கப்பட்டு வருகிறது. அதில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு முன்னுரிமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 5700 விண்ணப்பங்களே வந்துள்ளதால் அனைவருக்கும் பணியிடம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. 

 

இந்த நிலையில் ஆசிரியர்களையும், மற்ற துறை அதிகாரிகளையும் வஞ்சிக்கும் நோக்கத்தில் பேச்சுவார்த்தை நடத்தாமல் பணியிடை நீக்கம் செய்து மிரட்டப்படுவதால் 28 ந் தேதி முதல் போராட்டம் தீவிரமடையும் என்றும் சங்க நிர்வாகிகளை முன்னதாக கைது செய்ய போலிசார் கண்காணித்து வருவதால் சங்க நிர்வாகிகள் மாற்று இடங்களில் தங்கி இருந்து ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Next Story

‘போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை’ - பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
School Education Department takes action on Action against the protesting teachers

தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள், தங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். அதில் குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர்களின் இந்த போராட்டம், பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை நடந்தது. இதனையடுத்து, தமிழக அரசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. 

இந்த நிலையில், 19 நாள்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியதாவது, ‘சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 8, 2024 வரை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். 

அதில், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 19 நாள்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். மேலும், 19 நாள்களுக்கு உரிய ஊதியம் மற்றும் பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. .