Skip to main content

கடத்தி வரப்பட்ட 12 லட்சம் மதிப்புள்ள பான் மசாலா: 4 பேரிடம் விசாரணை

Published on 20/09/2017 | Edited on 20/09/2017
கடத்தி வரப்பட்ட 12 லட்சம் மதிப்புள்ள பான் மசாலா: 4 பேரிடம் விசாரணை

கோவையை அடுத்த கணபதி பகுதியில் பான் மசாலா பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக வந்த தகவலின் படி சரவணம்பட்டி காவல் துறையினர் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது பெங்களூரில் இருந்து கோவைக்கு வந்த தனியார் பேருந்தில் பான் மசாலா பொருட்கள்  பார்சல் செய்யபப்ட்டு கோவைக்கு கொண்டு வந்ததும், அந்த பொருட்கள் வேறு பல ஊர்களுக்கு கடத்தி செல்ல இருந்ததும் தெரிய வந்தது. 

பின்னர் அங்கு கொண்டு வரப்பட்ட பார்சல்களை பிரித்து பார்த்தபோது அதில் பல லட்சம் மதிப்பிலான பான் மசாலா பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. அதன் தற்போதைய மதிப்பு 12 லட்ச ரூபாய் இருக்கும் என காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகளான பவர் லால் மற்றும் மங்கள் ராம் ஆகியோரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து இவர்கள் பல பகுதிகளுக்கு தடை செய்யபப்ட்ட பான் மசாலா பொருட்களை கடத்தி வந்து விநியோகம் செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்து உள்ளது. மேலும் இது தொடர்பாக நான்கு பேரை விசாரித்து வருகின்றனர்.

அருள்குமார்

சார்ந்த செய்திகள்