Skip to main content

"எனது விருப்பம், ஆசை மற்றும் கனவு எல்லாம் இதுதான்" - ஸ்டாலினின் செயல்பாடு குறித்து நாஞ்சில் சம்பத்!

Published on 07/06/2021 | Edited on 07/06/2021
"We have come to ask from Russia who this Stalin is" - Nanjil Sampath is proud

 

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று, மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியானது. அதில் திமுக கூட்டணி வெற்றிபெற்றதையடுத்து, மே 7ஆம் தேதி பதவி ஏற்பு நிகழ்வானது நடைபெற்றது. அதில் முதல் முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுகொண்டார். இந்நிலையில், கடும் நெருக்கடியான சூழலில் தமிழகத்தின் முதல்வராக  ஸ்டாலின் பதவியேற்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. திமுகவின் இந்த ஒருமாத கால ஆட்சி குறித்து திராவிட இயக்கப் பேச்சாளரும், பற்றாளருமான நாஞ்சில் சம்பத்திடம் பேசினோம். அதில் அவர் நம்முடைய கேள்விக்கு கூறிய பதில் பின் வருமாறு,

 

ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு அவரது செயல்பாடுகளை எப்படி பார்க்கிறீர்கள்?

 

எனக்கு தெரிந்து நான் 1989ல் இருந்து தமிழ்நாட்டின் அரசியலை ஒரு மாணவனைப் போல் கவனித்து வருகிறேன். தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டதற்குப் பிறகு அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் தமிழகத்தின் மக்களுடைய நெஞ்சங்களில் ஆழமாகப் பதிந்து வருகிறது. இப்படி ஒரு முதலமைச்சருக்கு தமிழ்நாட்டின் மக்கள் தவம் இருக்க வேண்டும். அவ்வாறு அவருடைய நடவடிக்கைகள் அமைந்திருக்கிறது. ஒரு ஒத்திசைவு இல்லாத மாற்றங்கள் நிறைந்திருக்கின்ற, மத்திய அரசை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்?, நிதிநிலைமை எப்படி சரிசெய்யப் போகிறார்? கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றப் போகிறார்? என மில்லியன் டாலர் கேள்விகள் இந்த சூழலில் எழுந்திருக்கின்றது.

 

முதலமைச்சராக பொறுப்பேற்ற உடனேயே ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார். முதல் கையெழுத்தாக பால் விலையில் 3 ரூபாய் குறைத்ததன் மூலம் 2 லட்சம் லிட்டர் பால் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. நிதி நெருக்கடி இருக்கிறது என்று தெரிந்ததற்கு பிறகும் அதைச் சரியாகப் புரிந்து கொண்டு, கடந்த ஆட்சியில் தராத 4 ஆயிரம் ரூபாயை நிவாரண நிதியாகத் தருவேன் எனச் சொல்லி, முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் தமிழ்நாட்டில் அனைவருக்கும் கிடைத்துவிட்டது. இவ்வாறு அவர் போட்ட ஐந்து கையெழுத்து மூலம் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றப் பிறந்த தலைவன் மு.க.ஸ்டாலின் என்பதை அவர் நிரூபித்தார்.

 

அது மட்டுமில்லாமல் கரோனா பெருந்தொற்று என்கிற சுமையைத் தோளில் சுமந்து கொண்டுதான் அவர் முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். மத்திய அரசு, கரோனா இரண்டாம் அலை வருகிறது, அதை எதிர்கொள்ளத் திட்டம் வகுக்கவில்லை, அதுபற்றி கவலைப்படவுமில்லை. அதே போல் இந்தியாவில் உள்ள தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு விற்றுக் கொண்டு கரோனா ஒழிந்தது என்று கோஷமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழலில் இன்று தடுப்பூசி, ஆக்சிஜன் ஆகியவற்றுக்கு என்ன செய்வது என்ற நிலைமை வந்த பொழுது மேற்கு வங்காளம், மராட்டியம், ஒடிசா ஆகிய மாநிலங்களிலிருந்து ரயில்களில் ஆக்சிஜன் வந்துள்ளது. ரயில்களில் தண்ணீர் வந்துதான் நான் கேள்விப்பட்டுள்ளேன் ஆனால் இப்பொழுது ஆக்சிஜன் வருகிறது. 

 

சர்வதேச அரங்கில், "இப்படி ஒரு முதலமைச்சரா, யார் அந்த ஸ்டாலின் ?" எனக் கேட்கிற நிலைக்கு வந்துள்ளது. மோடியின் சாம்ராஜ்யத்தில் ஒரு முதலமைச்சராக இருந்துகொண்டு சர்வதேச டெண்டர் விடும் இப்படி ஒரு முதுகெலும்பு இருக்கும் முதலமைச்சரா என்கிற அளவுக்குத் தமிழ்நாட்டைத் தகவமைப்பதற்கு இடையூறாது, தடையில்லாது இமை மூடாமல் இயங்குகிற இந்த முதலமைச்சர் நீண்ட நாள் ஆரோக்கியத்தோடு வாழ்ந்து எங்கள் அன்னை தமிழ்நாட்டைப் பிரதிபலிக்கச் செய்ய வேண்டும் என்பதே நாஞ்சில் சம்பத்தின் விருப்பம், ஆசை மற்றும் கனவு.  
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறை விட்டுள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
PM Modi criticism Supreme Court has slapped the opposition parties in the face

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில், இரண்டாம் கட்டமாக இன்று பீகாரில் மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இதர இந்தியக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதன் சாவடி மூலம் பறித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர்கள் பழைய விளையாட்டை விளையாட முடியாது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கும் பாவத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று, நாட்டின் உச்ச நீதிமன்றம் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது. நம் நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமை, மத வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஏழைகளுக்குத்தான் உள்ளது.  இந்திய இந்துக்களை, தங்கள் ஓட்டு வங்கிக்காக, காங்கிரசு பாரபட்சமாக காட்டிய விதம் இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் உங்களின் உடைமைகளை, பெண்களின் மங்களசூத்திரங்களைக்கூட திருட விரும்புகிறார்கள். உங்கள் சொத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதை காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை” என்று பேசினார். 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.