Skip to main content

எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருப்பதற்கு தகுதியே கிடையாது: விஜயகாந்த் பேச்சு

Published on 02/04/2018 | Edited on 02/04/2018
Vijayakanth



விழுப்புரம் மாவட்டம் மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை பெற்று தந்த விஜயகாந்துக்கு பாராட்டு விழா நேற்றிரவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய விஜயகாந்த், பாலம் கட்டுவதற்கு உதவியாக இருந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். 
 

மேலும் பேசிய அவர், என்னை பற்றி இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் தவறாக பேசி வருகிறார்கள். அவர்கள் பேசட்டும். தேர்தல் சமயத்தில் நாங்கள் யார் என்று தெரியும். மணலூர்பேட்டை தென்பெண்ணையாற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் கட்டவேண்டும் என்பது இப்பகுதி மக்களின் 55 ஆண்டு கால கோரிக்கை. இதை நிறைவேற்ற நான், எனது மனைவி பிரேமலதா, சுதீஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து, மோடியை சந்தித்து நிதி பெற்றதன் அடிப்படையில் இங்கு பாலம் கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்பட்டுள்ளது.
 

எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருப்பதற்கு தகுதியே கிடையாது. இந்த விஜயகாந்தை விமர்சிக்க அருகதை இல்லை. வெல்லம் உடைவதைபோல்,  பழனிசாமி தலைமையிலான அரசு விரைவில் கவிழும். இவ்வாறு பேசினார்.

    
விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி மணலூர்பேட்டையில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் 55 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர். கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த், மத்திய அரசிடம் வலியுறுத்தி மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகத்திடம் இருந்து ரூ.21 கோடியே 89 லட்சத்தை சிறப்பு நிதியாக பெற்று தந்ததன் மூலம் பாலம் கட்டி முடிக்கப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்டது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்குவதில் தாமதம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

மத்திய அரசால், இந்திய குடிமகனுக்கான உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த விருதுகள் இருக்கிறது. இந்த விருதுகளுக்காக மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி, என பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை பரிந்துரை செய்யப்பட்டு பின்னர், விருது வழங்கும் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள். 

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (22.04.2024) நடைபெற்ற விழாவில் 3 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 55 பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டன. அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். இதில் பிரபல பாடகி உஷா உதூப் மற்றும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கும் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

நேற்றைய விழாவில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விருது வழங்கப்படவில்லை. அதனால் அடுத்தடுத்த கட்ட விழாக்களில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

அரசியல் வருகை குறித்த கேள்விக்கு சண்முகப்பாண்டியன் பதில்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
shanmuga pandian press meet

விஜயகாந்தின் இரண்டாவது மகனான சண்முகப் பாண்டியன் சகாப்தம், மதுர வீரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது படைத் தலைவன் படத்தில் நடித்து வருகிறார். டைரக்டர்ஸ் சினிமாஸ் தயாரிப்பில், உருவாகும் இப்படம் காட்டு யானைகளின் வாழ்வியலை மையப்படுத்தி ஆக்‌ஷன் ஜானரில் உருவாகிறது. யு. அன்பு இயக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். மேலும் ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். 

இந்த நிலையில் இன்று சண்முகப் பாண்டியன் பிறந்தநாள் காண்கிறார். இதையொட்டி பிரேமலதா விஜயகாந்துடன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இன்று விஜயகாந்த் மறைந்து 100 நாள் நிறைவடைகிறது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த இல்லாமல் முதல் பிறந்தநாளைக் காண்கிறார். அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது அவரிடம் விஜய பிரபாகரரை போல் அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா என்ற கேள்வி கேட்கப்பட்ட நிலையில் பதிலளித்த அவர்,  “நான் இப்போதைக்கு சினிமாவில் இருக்கிறேன். அண்ணன் அரசியலில் இருக்கிறார். அப்பாவின் ஒரு துறையை அண்ணன் எடுத்துக் கொண்டார். இன்னொரு துறையை நான் எடுத்துக்கொண்டேன்” என்றார். 

இதனிடையே சண்முகப் பாண்டியனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சிறிய வீடியோ ஒன்றை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளனர் படைத் தலைவன் படக்குழு. அப்படக்குழுவினரும் சண்முகப் பாண்டியனோடு இணைந்து விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.