Skip to main content

பாஜக கூட்டணிக்கு சசிகலா எதிர்ப்பு! திகைப்பில் எடப்பாடி!

Published on 06/02/2019 | Edited on 06/02/2019
sasikala



நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக தமிழகத்திலுள்ள பிரதான கட்சிகளான அதிமுகவும் திமுகவும் எப்படிப்பட்ட கூட்டணியை உருவாக்கப் போகிறது? என்கிற எதிர்பார்ப்பு இரு கட்சிகளின் தொண்டர்களிடமும் எதிரொலித்தபடி இருக்கிறது. 
 

அதற்கேற்ப இரு கட்சிகளும் தங்கள் தலைமையில் மெகா கூட்டணி அமைப்பதில் தனித்தனியாக வேகம் காட்டி வருகின்றன. இதற்காக, பல ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இருப்பினும், பல கூட்டணி கணக்குகள் கடைசி நேரத்தில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் பேச்சுவார்த்தைகள் நகர்ந்து கொண்டிருக்கிறது. 


இந்தநிலையில், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல், ஊழல் கட்சி என அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது அகில இந்திய பாஜக தலைமை! மத்திய ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் பெரியண்ணன் பாணியில் அதிமுகவை மிரட்டி கூட்டணிக்கு பணிய வைத்திருக்கும் பாஜக தலைமை, தங்களுக்கான தொகுதிகளை தாங்களே எடுத்துக்கொள்ளும் அரசியலை அதிமுகவில் புகுத்தி வருகிறது. 
 

eps



பாஜகவுடன் கூட்டணி வைக்க எடப்பாடி உள்ளிட்ட மூத்த அமைச்சர்களுக்கு விருப்பம் இல்லை. ஆனால், பாஜக முன்வைக்கும் மிரட்டல்களும் கோப்புகளும் கூட்டணிக்கு அவர்களை சம்மதிக்க வைத்திருக்கிறது. இந்த நிலையில்தான், பாஜக கூட்டணிக்கு கட்சியின் சம்மதத்தைப் பெறுவதற்காகவும், கூட்டணி குறித்த அபிப்பிராயத்தில் சுருதிபேதம் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் தான், அதிமுக மா.செ.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தை வரும் 8-ந்தேதி எடப்பாடியும் பன்னீரும் கூட்டியுள்ளனர். இதில் பல்வேறு பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. 
 

இந்த நிலையில், "சசிகலாவிடமிருந்து வந்த ஒரு தகவலால் அதிர்ச்சியடைந்திருக்கிறார் எடப்பாடி!" என்கிற தகவல் அதிமுக தரப்பில் பரவி வருகிறது. இதுகுறித்து விசாரித்த போது, "எடப்பாடி தலைமையில் அதிமுகவும் ஆட்சியும் இருந்தாலும் எடப்பாடிக்கு எஜமானர் இப்போதும் சசிகலாதான். அதனால், சசிகலாவிடமிருந்து எடப்பாடிக்கு அவ்வப்போது உத்தரவுகள் வந்துகொண்டுதான் இருக்கிறது. இது ரகசியமாகவே வைத்துக் கொள்ளப்படும். கடந்த சில மாதங்களாகத்தான்  உத்தரவுகள் வரவில்லை. இந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி அமைக்க எடப்பாடி சம்மதித்துள்ளார் என்கிற தகவல் அறிந்து டென்சனாகியிருக்கிறார் சசிகலா. எடப்பாடியின் முடிவை இளவரசியிடம் பகிர்ந்துகொண்ட சசிகலா, 'தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட ஜெயிக்கக் கூடாதுங்கிறது என்னோட சபதம்! ஆனா, அந்த பாஜகவின் வெற்றிக்கு கம்பளம் விரிக்கிறார் எடப்பாடி. அதற்காகத்தான், அதிமுக-பாஜக கூட்டணிக்கு சம்மதிக்கிறார்கள்' என கோபம் காட்டியிருக்கிறார். இந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி வைக்கக்கூடாது என தம்பிதுரை மூலமாக எடப்பாடிக்கு தகவலை பாஸ் பண்ணியிருக்கிறார் சசிகலா. இந்த தகவல்தான் தற்போது எடப்பாடியை திகைக்க வைத்துள்ளது. சசிகலாவின் தீவிர விசுவாசியான தம்பிதுரை, சசியின் விருப்பத்தை தெரிந்து கொண்டதால் தான் பாஜக கூட்டணிக்கு எதிரான கருத்துக்களை பொதுவெளியில் பகிரங்கமாக சொல்லி வருகிறார். மா.செ.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பாஜக கூட்டணிக்கு எதிரான குரலை வலிமைப்படுத்த மா.செ.க்களிடம் ரகசியமாக பேசி வருகிறார் தம்பிதுரை. இப்படிப்பட்ட சூழலில், சசிகலாவின் ரகசிய  கட்டளைக்கு எடப்பாடி பணிவாரா ? அல்லது சசிகலாவின் உத்தரவை உதாசீனப்படுத்துவாரா? என்பது மா.செ.க்களின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகே தெரியும் " என்கிறார்கள்  அதிமுக சீனியர்கள்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.