Skip to main content

தமிழகத்தில் ராகுல்காந்தி போட்டியிடும் தொகுதி எது? காங்கிரசார் விவாதம்!

Published on 16/02/2019 | Edited on 16/02/2019

 

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகளிடம் விவாதித்திருக்கிறார். அவர்களோ, நாடு முழுக்க வீசுற மோடி எதிர்ப்பு அலை, காங்கிரஸின் ஆதரவு அலையாக மாறியிருக்கிறது. அதனால் திமுகவிடம் டபுள் டிஜிட்டில் நாம் சீட்டு கேட்க வேண்டும், கோஷ்டிக்கு ஒரு சீட்டாவது வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். 

 

rahul gandhi


இதனை கே.எஸ்.அழகிரி மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இதேபோல் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களும் ராகுல்காந்தியிடம் பேசியிருக்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் தலைமை எந்த ரியாக்சனையும் காட்டவில்லையாம். 
 

இந்தநிலையில் ராகுல்காந்தி தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் நினைக்கிறார்கள். போன எம்பி தேர்தலில் காங்கிரஸ் தனித்து நின்றபோதும், அதன் வேட்பாளர் வசந்தகுமார் இரண்டாம் இடம் பிடித்த கன்னியாகுமரியிலோ அல்லது ராஜீவ்காந்தி உயிர்நீத்த ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலோ ராகுல் காந்தி நின்றால் நிச்சயமாக வெற்றி பெறலாம் என்றும், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வளர்ச்சி அடையும் என்றும் நம்புகிறார்கள். இதுபற்றி டெல்லி தலைமையிலும் கூடிய சீக்கிரம் சொல்லப் போகிறார்களாம். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாடாளுமன்றத்தில் ஹெலிகாப்டர் மூலம் இறங்கிய என்.எஸ்.ஜி வீரர்கள்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
NSG soldiers landed in parliament by helicopter

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் நாடாளுமன்ற வளாகத்துக்குள் இறங்கி ஒத்திகை நிகழ்வில் ஈடுபட்டனர்.

சில மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பார்வையாளர் மாடத்தில் இருந்து  அத்து மீறி சிலர் வண்ணத்தை உமிழும் பொருட்களை எடுத்துக்கொண்டு நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்திற்குள் ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதனையடுத்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்து பல்வேறு விமர்சனங்களையும் கருத்துகளையும் வைத்திருந்தனர். இந்நிலையில் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக என்.எஸ்.ஜி வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் டெல்லி நாடாளுமன்றத்தின் வளாகத்திற்குள் இறங்கி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.