4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களிலும் அனைத்து கட்சிகளும் மிக தீவிரமாக பிரச்சாரம் நடத்தி வருகிறது. அதிமுக, திமுக மட்டுமில்லாமல் அனைத்து கட்சிகளும் அந்த வெற்றிக்காக போராடி வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக கூட்டணி கட்சியான புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தனது பிரச்சாரத்தை தொடங்கினார். அவருக்கு தொடங்கியதிலிருந்தே பிரச்சனைதான்.
கிருஷ்ணசாமிக்கு அதிமுக அமைச்சர்கள் உதவ மறுத்துள்ளனர். அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜி, விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, காமராஜ் ஆகியோருக்கு இடையே உள்ள உட்கட்சி பூசல்தான் இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இதனால் கோபமடைந்த கிருஷ்ணசாமி, தனது 10 நாட்கள் பிரச்சாரத்தை 2 நாட்களில் முடித்துக்கொண்டு கோயம்புத்தூருக்கு சென்றுவிட்டார்.
அவரை தொடர்புகொண்டபோது, அவரிடமிருந்து சரியான பதில்கள் வரவில்லையென்றும் கூறுகின்றனர். இதனால் அவர் இனி பிரச்சாரத்திற்கு வரமாட்டார் என்றும் கூறுகின்றனர்.