Skip to main content

தொடர்ச்சியாக விபத்து -தமிழக செய்தித்துறை அதிகாரிகள் பீதி!

Published on 08/06/2020 | Edited on 08/06/2020

 

car


தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறைக்கு இது போதாத காலம் போலிருக்கிறது! மக்கள் தொடர்பு அலுவலர்கள் பலரும் விபத்தில் சிக்கித் தப்பித்து வருகிறார்கள். இதனால், அரசின் பணிகளைக் கவனிப்பதற்காக வெளியில் செல்ல அலுவலர்களிடம் அச்சம் சூழ்ந்திருக்கிறது!
 

         
தமிழக அரசின் ஒவ்வொரு ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மக்களிடம் கொண்டு செல்லும் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார்கள் மக்கள் தொடர்பு அலுவலர்கள் (பி.ஆர்.ஓ.க்கள்). ஒரு நாளைக்கு சுமார் 18 மணி நேரம் விழிப்புடன் இருக்க வேண்டிய பொறுப்பில் இவர்கள் இருக்கின்றனர். இந்த கரோனா காலத்தில் மேலும் பல பணிகளைச் சுமந்து வருகின்றனர். அப்படிப்பட்ட பி.ஆர்.ஓ.க்களுக்கு தற்போது நேரம் சரியில்லை! வாகனங்களில் செல்லும் போது ஆக்சிடெண்டில் சிக்கிக் கொள்கிறார்கள் பி.ஆர்.ஓ.க்கள்! 
               
நீலகிரி மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் இளங்கோவன், அலுவல் பணி நிமித்தம் இரு சக்கர வாகனத்தில் பெருந்துறை சென்று விட்டு ஊட்டி திரும்பும் வழியில் விபத்து ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உடல் நலம் தேறியிருந்தாலும் தற்போது வரை ஐ.சி.யூ.வில் இருக்கிறார். 
 

                  
நெல்லை மாவட்ட பி.ஆர்.ஓ. செந்தில், இரு சக்கர வாகனத்தில் வலங்கைமான் சென்று விட்டு மீண்டும் நெல்லைக்குத் திரும்பும் வழியில் விபத்தில் சிக்கினார். தஞ்சையிலுள்ள மதுரை மிஷன் மருத்துவமனையில் ஐ.சி.யூ.வில் சேர்க்கப்பட்டார் செந்தில். டாக்டர்களின் தீவிர சிகிச்சையில் குணமடைந்து வருகிறார். ஐ.சி.யூ.விலிருந்து இன்னும் டிஸ்சார்ஜ் ஆகவில்லை ! 
                  
சேலம் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரைக்கு ஏற்பட்ட வாகன விபத்தில், கால் எலும்பு விரிசல் கண்டது. தீவிர சிகிச்சையளிக்கப்பட்டதில் குணமடைந்து வருகிறார் அண்ணாதுரை. 
                        
செங்கல்பட்டு மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலராக இருக்கிறார் ராஜகணேஷ். இவரும் சமீபத்தில் வாகன விபத்தில் சிக்கி, மருத்துவச் சிகிச்சைக்குப் பின் தற்போது மருத்துவ விடுப்பில் வீட்டில் இருக்கிறார்.   
        

http://onelink.to/nknapp


சென்னையில் கூடுதல் இயக்குநராக உள்ள அம்பலவாணன், மக்கள் தொடர்பு அலுவலர் தமிழ்ச்செல்வன், புகைப்படக்காரர் விஜய் ஆகியோர், பொலேரோ ஜீப்பில் சென்றபோது விபத்தில் சிக்கினர். சிறு காயங்களுடன் அவர்கள் தப்பித்தனர். மருத்துவச் சிகிச்சை எடுத்துக்கொண்டதற்குப் பிறகு தற்போது அலுவலகம் வந்து போகின்றனர். 
                         
தமிழக செய்தித் துறையின் முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் அலுவலர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தொடர்ச்சியாக விபத்து ஏற்படுவது கண்டு, செய்தித்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.