Skip to main content

இடைத்தேர்தலில் மாறி மாறி குற்றம் சாற்றும் தலைவர்கள்!  

Published on 09/10/2019 | Edited on 09/10/2019

புதுச்சேரி காமராஜ் நகரில் காங்கிரஸ், திமுக கூட்டணி சார்பில் ஜான்குமார் போட்டியிடுகிறார். என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கூட்டணி சார்பில் புவணேஸ்வரன் போட்டியிடுகின்றார். காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியும், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து முன்னாள் முதல்வர் ரங்கசாமியும் மற்றும் இவ்விரு கூட்டணி கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 

pondicherry election



பிரச்சாரத்தின் போது இன்னாள் முதல்வரும், முன்னாள் முதல்வரும் ஒருவர் ஒருவர் மாறி மாறி குற்றசாட்டுகளை அள்ளி வீசுகின்றனர்.

நேற்றைய பிரசாரத்தின்போது முதலமைச்சர் நாராயணசாமி, “காமராஜ் நகர் தொகுதியில் வெற்றி பெற்றால் ஆட்சி மாற்றம் என்கிறார் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி. புதுவையில் ஆட்சி அமைக்க வேண்டுமானால் 16 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு வேண்டும். ஆனால் எதிர்க்கட்சிகளின் பலம் 11 ஆகத்தான் உள்ளது. அதிலும் என்.ஆர்.காங்கிரசில் 7 எம்.எல்.ஏ.க்கள்தான் உள்ளனர். அவர் கணக்கு தெரியாமல் ஆட்சி மாற்றம் என்கிறாரா? அல்லது மக்களை ஏமாற்ற அப்படிச் சொல்கிறாரா? ஆட்சி மாற்றம் என்று அவர் அரைத்த மாவையே அரைக்கின்றார். அவரது கட்சியில் உள்ளவர்கள் வேறு கட்சிக்கு ஓடி விடக்கூடாது என்பதற்காக ஆட்சி மாற்றம் என்ற தேனை தடவுகின்றார். தேர்தல் முடிந்தவுடன் வீட்டுக்கு சென்றுவிடுவார். அவர் முதலில் எதிர்க்கட்சி தலைவர் போல் செயல்படுகிறாரா? தேர்தல் நேரத்தில் மட்டும்தான் மக்களை தேடி வருவார்.  சட்டமன்ற கூட்டம் நடக்கும்போதே வாட்ச் கடையில்தான் (கைக்கெடிகாரம்) உட்கார்ந்திருந்தார். அவரை எதற்காக மக்கள் தேர்வு செய்தனர்? ரங்கசாமி எதிர்க்கட்சி தலைவராக செயல்பட வேண்டும்ம், இல்லாவிட்டால் அந்த பதவியை ராஜினாமா செய்யவேண்டும்” என்று ரங்கசாமி மீது குற்றச்சாடுகளை அடுக்கினார்.

இதேபோல் ரங்கசாமி பிரச்சாரத்தின் போது, “ புதுவை அரசுக்கு இப்போதுள்ள அதிகாரம் தான் நாங்கள் ஆட்சியில் இருந்த போதும் இருந்தது. அதை வைத்துக்கொண்டுதான் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றினோம். கடைசி நேரத்தில் கூட வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக இலவச மிக்சி, கிரைண்டர் வழங்கினோம். சிலரிடம் வாக்குகேட்கும்போது, உங்களால்தான் எங்கள் பிள்ளை டாக்டர் ஆனார்கள் என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
 

pondicherry election



இந்த ஆட்சியில் புதிதாக என்ன திட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள்? தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. எதிர்க்கட்சிகள் தான் வழக்கமாக ஆளும் கட்சியை குறை சொல்லும். ஆனால் புதுவையில் ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சிகளை குறை கூறி காலத்தை கடத்தி வருகின்றனர். மக்களை பற்றி சிந்தித்து மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவது தான் ஆட்சியாளர்களின் வேலை. ஆனால் அந்த வேலையை இவர்கள் செய்வதில்லை. இந்த ஆட்சி எப்போது மாறும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது. மக்களுக்கு தேவையானதை செய்யாமல் எதிர்க்கட்சிகளை குறை சொல்வதை ஆளுங்கட்சியினர் நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என்று பதிலடி கொடுத்தார்.

முன்னாள், இன்னாள் முதல்வர்கள் இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் குற்றசாட்டுகளை கூறிக் கொண்டு வீடு வீடாக வாக்குகள் சேகரிப்பதை விந்தையாக பார்க்கின்றனர் புதுச்சேரி காமராஜ் தொகுதி மக்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.