Skip to main content

டிடிவியால் ஓட்டு சிதறும் என்பதால் மகனுக்காக களமிறங்கும் ஓ.பி.எஸ்.!

Published on 18/03/2019 | Edited on 18/03/2019

 

    தேனி பாராளுமன்ற தொகுதி துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகன் மூலம் வி.ஐ.பி. தொகுதியாக உருவாகிவிட்டது. தேனி மாவட்டத்தில் உள்ள போடி, பெரியகுளம், கம்பம், ஆண்டிப்பட்டி ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளும் மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி, சோழவந்தான் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளும் சேர்ந்ததுதான் தேனி பாராளுமன்ற தொகுதி. 
 

இந்த தேனி பாராளுமன்ற தொகுதியில் முக்குலத்தோர் பிரிவில் உள்ள பிரமலைக்கள்ளர் சமூகத்தினர் தான் பெரும்பான்மையானோர் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக தாழ்த்தப்பட்ட சமூகத்தினர், மறவர், நாயக்கர், கவுண்டர், செட்டியார், நாடார் உள்பட சில சமூகத்தினருடன் கிறிஸ்தவர், முஸ்லீம் மக்களும் கனிசமாக வாழ்ந்து வருகிறார்கள். 

 

ops


 

கடந்த தேர்தலின் போது ஜெ.விடம் ரவீந்திரநாத்துக்கு ஓ.பி.எஸ். சீட் கேட்டார். ஆனால் ஜெ.வோ ஓ.பி.எஸ்.-யின் ஆதரவாளரான பார்த்திபனுக்கு சீட் கொடுத்ததின் மூலம் பார்த்திபனுக்கு வேஷ்டி, சட்டை முதல் வாங்கிக் கொடுத்து ஓ.பி.எஸ். வெற்றி பெற வைத்தார். 
 

தற்போது ஜெ. இல்லாததாலும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்.சே இருப்பதால் ரவீந்திரநாத்திற்கு சீட் கொடுத்து இருக்கிறார். அதைக்கண்டு ஓ.பி.எஸ். ஆதரவாளர்களும், ஓ.பி.எஸ். சமூகத்தினர்தான் உற்சாகமாக இருக்கிறார்களே தவிர பெரும்பாலான கட்சிக்காரர்கள் மற்றும் மற்ற சமூகத்தினர் எந்த ஒரு ஆர்வமும் காட்டவில்லை. 
 

ஏற்கனவே 2004ல் டிடிவி போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அதன்பின் 2009ல் தங்கத்தமிழ்ச்செல்வன் போட்டியிட்டும் தோல்வியை தழுவினார். இத்தொகுதியில் தங்கள் சமூகத்தினர் பெரும்பான்மையாக இருந்தும் கூட தங்கள் தோல்விக்கு ஓ.பி.எஸ். தான் காரணம். ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் ஓட்டு போடததுனாலதான் டிடிவியும், நானும் தோற்றோம் என தங்கத்தமிழ்ச்செல்வனே வெளிப்படையாக சொன்னார்.  
 

இந்த நிலையில், சமூக மக்கள் ஓட்டு வங்கி கை கொடுக்க தயாராக இருக்கிறது என்பதால் ஓ.பி.எஸ்., தன் மகன் ரவீந்திரநாத்தை தேர்தல் களத்தில் இறக்கியுள்ளார். இதற்காக தனது ஆதரவாளர்களுக்கு கட்சி பொறுப்புகளை வழங்கியுள்ளார். இருந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் துரைராஜின் மகன் தனசேகரனை களத்தில் இறக்க டிடிவி தயாராகி வருவதின் மூலம் ஓட்டுக்கள் சிதற போகிறது என்ற பீதியில் ஓ.பி.எஸ். இருந்து வருகிறார்! 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காரும் - லாரியும் மோதி விபத்து; மாவட்ட கல்வி அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Car-Lorry Collision incident Tragedy happened to the district education officer

காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மாவட்ட கல்வி அதிகாரி உள்பட இருவர் பலியான சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி விளக்கு என்ற பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அதே சாலையில் மின் லாரி ஒன்றும் எதிர் திசையில் வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் காரில் இருந்த தேனி மாவட்ட தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அதிகாரி சங்குமுத்தையா மற்றும் அவரது கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கிய மினி லாரி ஓட்டுநர் படுகாயங்களுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கி கல்வி அதிகாரி சங்குமுத்தையாவும், அவரது கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ஆளுநர் வருகை; தேனியில் கருப்புக்கொடி காட்டி போராட்டம்!

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
Governor Ravi in Theni by DMK alliance parties showing black flag

தேனி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக  ஆளுநர் ஆர்.என் ரவி மதுரை விமான நிலயத்திலிருந்து சாலை வழியாக தேனி மாவட்டத்திற்கு வருகை தந்தார்

இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி வருகைக்கு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் செயலைக் கண்டித்தும் தமிழக அரசுக்கு எதிராக ஆளுநர் தொடர்ந்து இடையூறு செய்வதைக் கண்டித்தும் இன்று தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து தேனி பழைய பேருந்து நிலையத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருப்புக் கொடிகளைக் காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சுமார் ஐநூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் உட்பட கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்புகளை பழைய பஸ் நிலையம் அருகே தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.