Skip to main content

ஓபிஎஸ் தாயார் மருத்துவமனையில் அனுமதி

Published on 06/01/2023 | Edited on 06/01/2023

 

OPS – Mother admitted to hospital

 

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் தேனி பெரியகுளத்தில் வசித்து வருகிறார். 90 வயதான பழனியம்மாளுக்கு இன்று மதியம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து தேனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு போதுமான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

தனது தாயாரைக் காண்பதற்காகச் சென்னையிலிருந்து தேனிக்கு விரைந்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

 

 

சார்ந்த செய்திகள்