Skip to main content

"கீழடியில் கிடைத்தது இதுதான்..." தொல்லியல் ஆய்வு குறித்து மாஃபா பாண்டியராஜன்!

Published on 19/06/2018 | Edited on 19/06/2018
mafa

 

மதுரை விமான நிலையத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன்  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

’’கீழடியில் 4 வது கட்ட அகழ்வாராய்ச்சி வெற்றிகரமாக நடந்துள்ளது.  அங்கு கிடைத்த எந்த வித பொருள் பற்றியும் மறைக்கவில்லை.  ஆய்வில் கிடைத்த பொருளின் தன்மை ஆகியவை வெளிப்படையாக அறிவிக்கப்படும்.

கடந்த 2 மாதம்  நடைபெற்ற ஆய்வு நிறைவு பெற்றுள்ளது . 10 ஏக்கர் பரப்பளவில் ஆய்வு மேற்கொண்டதில் மொத்தம் எவ்வளவு கிடைத்தது என்பதை மக்களுக்கு தெரியபடுத்தப்படும்.

 

 


ஆய்வில் புதையல் கிடைக்கவில்லை, சில தங்க ஆபரணங்கள் கிடைத்துள்ளன. எடப்பாடி அரசு இது குறித்து திங்கள் கிழமை சட்டமன்றத்தில் வெளியிடும்.  கீழடி அகழ்வாராய்சியில் 3வது இடம் உள்ளது.

இதைவிட பெரிய கண்டுபிடிப்புகள் திருவள்ளுரில் 3 லட்சத்து 75 ஆயிரம் வருடம் முந்தைய கற்கால ஆயுதங்கள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. காலம் மொழி சார்ந்த ஒலியை வைத்து காட்சி படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிது. 50 லட்சம் செலவில்  ஆய்வு மையம் உருவாக்கி அதனை உலக தரம் மிக்க கள ஆய்வு  பணிகள் மேற்கொள்ளப்படும்.

14 கோடி செலவில் ஆதிச்ச நல்லூர் , கீழடி  உள்ளிட்ட 4 இடங்களில் ஆய்வு  செய்த பொருட்களை கொண்டு அருங்காட்சியகம்  அமைக்கப்படும்.

 

 

 

 


முதல்வர், துணை முதல்வர் இருவருக்கும் நல்ல புரிதல் உள்ளது. ராமர், லஷ்மனர் போல் ஒன்றுபட்டு சிறப்பாக செயல்படுகின்றனர்.  இருவரும் ஒற்றுமையாக 2, 3, 4 தொகுதிகளில் காவிரி வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

ஸ்டெர்லைட் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருவரும் இணைந்தே செயல்படுகின்றனர் . சிறப்பாக வழிநடத்தி வருகின்றனர்.  சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது’’என்று தெரிவித்தார்.




 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“திமுக ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளலாம் அதற்காக இப்படியா?” - முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

MM

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “2015ல் மத்திய அரசு கீழடி விஷயத்தில் இதற்கு மேல் தோண்டுவதற்கு வாய்ப்பில்லை என்று சொன்னதற்கு பிறகு ஜெயலலிதா மாநில அரசாங்கத்தால் அது செய்யப்படும் என்று சொல்லி மூன்றாவது கட்டம், நான்காவது கட்டம், ஐந்தாவது கட்டம் அகழாய்வுகளை நிறைவு செய்தார். உலகத்தமிழ் மாநாடு சிகாகோவில் நடந்த பொழுது அந்த மாநாட்டிற்கு தீமே 'கீழடி என் தாய்மடி' என்று வைத்து அதன் பிறகு ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி முன்னெடுப்பில் உலகத்தரம் மிக்க அருங்காட்சியகம் அந்த இடத்தில் அமைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசிடம் நிதி கேட்டார்.

 

மத்திய அரசு தரவில்லை. இத்தனை நிதிச் சுமையிலும் 12.5 கோடி ரூபாய் ஒதுக்கி அந்த இடத்தில் கட்டடத்திற்கு டிசைன் அப்ரூ கொடுத்து, காண்ட்ராக்டர் போட்டு 90 விழுக்காடு வேலைகள் நடந்தது. அதற்கடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு ஒரு வேலைகூட செய்யவில்லை. இப்பொழுது இந்த ஒரு வருடத்தில் கிடுகிடுவென்று வேலையை முடித்துவிட்டு எடப்பாடி பழனிசாமியின் பெயரை தாங்கிய, ஜெயலலிதாவின் பெயரை தாங்கிய அடிக்கல்களை எடுத்துவிட்டு ஏதோ எல்லாத்தையுமே திமுகதான் செய்தது போல் காட்டிக் கொள்கிறார்கள். திமுக ஸ்டிக்கர் ஒட்டுவது தப்பில்லை. ஆனால் இருக்கிற அடிக்கல் ஆவணங்களை எடுக்கக் கூடாது. அந்த இடத்தில் மீண்டும் அவர்களுடைய அடிக்கல் நாட்டிய ஆவணம் இருக்க வேண்டும்.” என்றார்.

 

 

Next Story

'இதில் நான் ஏ.ஆர்.ரஹ்மான் கட்சி'-முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி!

Published on 03/05/2022 | Edited on 03/05/2022

 

 'I am AR Rahman's party in this' - Former Minister Mafa Pandiyarajan interview!

 

அண்மையில் மத்திய அமைச்சர் அமித் ஷா 'இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தியை கொண்டு வர வேண்டிய தருணம் இது' என பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் தமிழகத்தில் அதற்கு எதிர்ப்புக்குரல்கள் கிளம்பியது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 'தமிழ்தான் இந்தியாவின் இணைப்பு மொழி' என்று கருத்து தெரிவிக்க, பல்வேறு பிரபலங்கள் இந்தி திணிப்புக்கு எதிராக தங்களது கருத்துக்களை தொடர்ச்சியாக வெளிப்படுத்தினர். இதற்கு முன்பே இதேபோன்ற இந்தி திணிப்பு தொடர்பான பேச்சுக்கள் தமிழகத்தில் உருவானபோது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா 'இந்தி தெரியாது போடா' என்ற வாசகம் இடம்பெற்ற டி ஷர்ட் அணிந்திருந்தது ட்ரெண்ட் ஆனது.

 

இந்நிலையில் திரைப்பட நடிகை சுகாசினி இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள், அவர்களிடம் பேச வேண்டும் என்றால் இந்தி கற்று கொள்ள வேண்டும் என்ற ஒரு கருத்தை முன்வைத்திருந்தார். இந்நிலையில் இந்தி திணிப்பு சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், 'நான் இந்த விஷயத்தைப் பொறுத்தவரை ஏ.ஆர் ரஹ்மான் கட்சி. என்னைப் பொறுத்த வரைக்கும் தமிழ் மொழி இணைப்பு மொழியாக பரிசீலிக்கப்பட வேண்டும். இந்தியாவின் மூத்த மொழி தமிழ். அதற்குத்தக்க முயற்சிகளை தமிழக அரசாங்கம் எடுக்க வேண்டும். போன ஆட்சியில் அதிக தமிழ் மையங்களை உருவாக்கினோம். அதுபோன்று அதிக மையங்களை உருவாக்க வேண்டும். பண்பாட்டு மையங்களை உருவாக்க வேண்டும், தமிழ் கற்றுக் கொடுக்கக்கூடிய மையங்களை உருவாக்க வேண்டும், பன்மடங்கு அவற்றையெல்லாம் உருவாக்கினால் ஒரு காலகட்டத்தில் இணைப்பு மொழியாக தமிழ் வருவதற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது என நினைக்கிறேன். அதற்கான முயற்சிகளை நாம் இன்னும் அதிகமாக எடுக்க வேண்டும். பல பேருக்கு தெரிவதில்லை. ஹிந்தி தான் தேசிய மொழி என்ற கருத்தை அவ்வளவு பெரிய நடிகர் அஜய் தேவ்கன் அழுத்தமாகப் பதிவு செய்கிறார் என்றால் அவருக்கு தெரியவில்லை என்று அர்த்தம். இதைப் பொறுத்தவரை ஏ.ஆர்.ரஹ்மான் எடுத்த டிராக் மிகச்சரியான டிராக் அதற்கு நாம் அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும்'' என்றார்.