Skip to main content

பேரூராட்சி தலைவர் பதவிக்கு 300பேரிடம் நேர்காணல் நடத்திய அமைச்சர் ஐ. பெரியசாமி

Published on 15/01/2022 | Edited on 15/01/2022

 

Minister I Periyasamy who interviewed 300 people for the post of mayor.

 

ஆத்தூர் தொகுதியில் உள்ள பேரூராட்சிகளான கன்னிவாடி, ஸ்ரீராமபுரம், தாடிக்கொம்பு, அகரம் பேரூராட்சிகளில் போட்டியிட தி.மு.க. சார்பாக விருப்ப மனு கொடுத்தவர்களிடம் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேர்காணல் நடத்தினார். 

 

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கன்னிவாடி, ஸ்ரீராமபுரம், தாடிக்கொம்பு, அகரம் ஆகிய பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளில் தி.மு.க. சார்பாக போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நிகழ்ச்சி திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. தலைமை அலுவலகம்மான கலைஞர் மாளிகையில் நடைபெற்றது. இந்த நேர்காணலுக்கு தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை தாங்கினார். முன்னாள் நகர்மன்றத் தலைவர் பசீர் அகமது, ஒன்றிய செயலாளர்கள் சிவகுருசாமி, நெடுஞ்செழியன், வடக்கு ஒன்றிய செயலாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 

பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளில் தி.மு.க. சார்பாக விருப்ப மனு கொடுத்தவர்களிடம் வார்டில் அவர்களுக்குள்ள செல்வாக்கு, பலம், கட்சி பணி உட்பட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களிடம், ‘அதே வார்டில் வேறு ஒருவருக்கு இடஒதுக்கீடு செய்து சீட் வழங்கினால் தேர்தல் பணி ஆற்றுவீர்களா?’ என்று கேட்டதாகவும், அதற்கு பணியாற்றி அவரை வெற்றிபெற வைப்போம் என்று கூறியதாகவும், நேர்காணலில் கலந்துகொண்ட சிலர் தெரிவித்தனர். நான்கு பேரூராட்சிகளின் தலைவர் பதவிக்கு நடைபெற்ற நேர்காணலில் சுமார் 300 பேர் கலந்துகொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லாருமே திருடங்கதான்... சொல்லப் போனா...' - பாடலுக்கு நடனமாடியபடி வந்த சுயேச்சை வேட்பாளர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Independent candidate danced to the song 'ellarume Thirudangathan... sollpona...'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. நேற்று முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலர் இறுதி நாள் என்பதால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் நூதன முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வது முன்னரே பல தேர்தல்களில் நடந்துள்ளது.

தேர்தல் நேரங்களில் இதுபோன்ற நூதன சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல்லில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 'எல்லாருமே திருடங்கதான் சொல்லப்போனால் குருடங்கதான்' என்ற பாடலை ஒலிக்கவிட்டபடி சாலையில் நடனமாடிக்கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

நூதன முறையில் வாக்கு சேகரித்த அமைச்சர் ஐ. பெரியசாமி!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Minister I.Periyasamy who collected votes in the traditional manner

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் திண்டுக்கல் ஒன்றியப் பகுதிகளில் சி.பி.எம். வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கு வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தையொட்டி புறாவை பறக்க விட்டு தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை பெற்று வா என நூதன முறையில் அமைச்சர் ஐ. பெரியசாமி வாக்கு சேகரித்தார். திண்டுக்கல் ஒன்றியம் பள்ளபட்டி ஊராட்சியில் முருகபவனம் பகுதியில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் துவங்கியது. அப்போது அமைச்சர் ஐ. பெரியசாமி பிரச்சாரத்தில் பேசும் போது, “மக்கள் பணியே மகேசன் பணி என செயல்படுபவர் தான் சச்சிதானந்தம். நாம் மகத்தான வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைப்போம். அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. சச்சிதானந்தம் எம்.பி. ஆகிறார்” என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

அதை தொடர்ந்து சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் பேசுகையில், “இது புறாவிடு தூது அல்ல... இந்த புறா டெல்லி வரை பறந்து சென்று வரும். புறாவை டெல்லிக்கு அனுப்பி நமது மாநிலத்திற்கான நிதியை பெற்று வருமா? என்பது சந்தேகமே. இருந்தாலும் இந்த புறாவை பறக்க விட்டு நமது பிரச்சாரத்தை துவக்கி வைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி” எனக் கூறினார்.