Skip to main content

கர்நாடகா : ஜெயாநகர் தொகுதியில் பா.ஜ.க.வை தோற்கடித்தது காங்கிரஸ்!

Published on 13/06/2018 | Edited on 13/06/2018

ஜெயாநகர் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி வெற்றிபெற்றுள்ளார். 
 

jayanagar

 

 

 

கர்நாடக மாநிலத்திற்கான சட்டசபைத் தேர்தல் கடந்த மே 12ஆம் தேதி நடந்துமுடிந்தது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் ராஜராஜேஸ்வரி நகர் மற்றும் ஜெயாநகர் தொகுதிகளில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜூன் 11ஆம் தேதி ஜெயாநகர் தொகுதிக்கான தேர்தல் நடந்துமுடிந்தது. காங்கிரஸ் சார்பில் ராமலிங்க ரெட்டியின் மகள் சவுமியா ரெட்டியும், பா.ஜ.க. சார்பில் பி.என்.பிரஹலாதாவும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலுக்கான முடிவுகள் இன்று வெளியாகின. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருந்தது. 
 

இந்நிலையில், 53,411 வாக்குகளுடன் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சவுமியா ரெட்டி வெற்றிபெற்றார். அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பிரஹலாதாவை 2,889 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்தத் தொகுதிக்கான தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி தமது வேட்பாளரை நிறுத்தாமல் காங்கிரஸ் கட்சிக்கே ஆதரவை தெரிவித்தது. 
 

முன்னதாக, ராஜராஜேஸ்வரி நகரில் நடந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் முனிரத்னா வெற்றிபெற்றார். அந்தத் தேர்தலில் மதஜ, பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் தங்கள் வேட்பாளர்களைக் களமிறக்கியது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.