Skip to main content

ஆன்லைனில் ஓட்டு வேட்டை நடத்தும் தமிழக காங்கிரஸ் வேட்பாளர் லுயிஸ் அடைக்கலராஜ் !

Published on 19/02/2019 | Edited on 19/02/2019

 

பாராளுமன்ற தேர்தல் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்காத நிலையில் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. திமுக-காங் பேச்சுவார்த்தை தற்போது டில்லியில் நடைபெற்று வருவதாகவும் இதற்காக எம்பி கனிமொழி டில்லியில் தங்கி ராகுல்காந்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

 

lo


இந்த நிலையில் நேற்று காலையிலிருந்து திருச்சியில் உலாவரும் வாட்ஸ் அப் தகவல் திமுக, காங்கிரஸ் மட்டுமல்லாது தோழமை கட்சியினர் இடையே ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. 

 

ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ள தகவலில் திருச்சி லோக்சபா வேட்பாளராக லூயிஸ் அடைக்கலராஜ்( முன்னாள் எம்பி அடைக்கலராஜின் மகன்) நிற்க அவரை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்றும், உங்கள் வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணை - 9944999991 என்ற எண்ணுடன் 8828843022 என்கிற எண்ணுக்கு அனுப்புங்கள் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த வாட்ஸ் அப் பதிவு முதலில் காங்கிரசில் இருந்து வெளியானதாக கூறப்படுகிறது.

 

lo

 

இந்த தகவல் கட்சியினர் இடையே பெரிய பரபரப்பை உண்டாக்கி உள்ளது. இன்னும் கூட்டணியே எத்தனை இடங்கள் என்று இன்னும் முடிவு எட்டாத நிலையில் இப்படி வாட்ச் அப் செய்தியால் எல்லோரும் குழப்பம் அடைந்துள்ளனர். இது குறித்து லூயிஸ் தரப்பில் விசாரித்தால் யாராவது ஆர்வக் கோளாரில் செய்து இருப்பார்கள் என்கிற தகவலே வெளியாகி உள்ளது. 

 

திருச்சி நாடாளுமன்ற தொகுதியை வைகோ கேட்டுக்கொண்டு இருக்கும் நிலையில் திருச்சியில் 4 முறை காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற அடைக்கலராஜ் மகன் லூயிஸ் அடைக்கலராஜின் இந்த ஆன்லைன் ஓட்டு வேட்டை கட்சியினர் இடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.