Skip to main content

திமுகவுடன் பேசும் அதிமுக எம்எல்ஏக்கள் யார்? யார்? பட்டியலுடன் எடப்பாடி...

Published on 05/06/2019 | Edited on 05/06/2019


 

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான அன்று ஸ்டாலின் ஆவலோடு எதிர்பார்த்து இருந்தது இடைத்தேர்தல் முடிவுகளைத்தான். கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டும், இடைத்தேர்தலில் 9 தொகுதிகளை நழுவவிட்டதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் ஜீரணிக்க முடியவில்லை. 
 

மத்தியில் பாஜக மீண்டும் வலிமையாக அமர்ந்துவிட்டதால் எடப்பாடி பழனிசாமி அரசை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு அசைக்க முடியாதோ என்ற சந்தேகம் எழுவதாக திமுக சீனியர்கள் பேசிக்கொள்வது, ஸ்டாலின் கவனத்திற்கு சென்றது. 

 

eps



 

 

இந்தச் சூழலில் தளபதிக்கு சம்மதம் எனில் அதிமுகவை உடைக்க முடியும் என்று செந்தில் பாலாஜி கூறியிருக்கிறாராம். மேலும் அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் தன்னிடம் நல்ல நட்பில் இருக்கிறார்கள் என்று அனிதா ராதாகிருஷ்ணனும் சொல்லியிருக்கிறார். அதிமுக எம்எல்ஏக்கள் பலரும் அமைச்சர் பதவி, வாரியப் பதவி கிடைக்காமல் அதிருப்தியில் இருக்கிறார்கள். மேலும் அமைச்சர்கள் சிலரும் எடப்பாடியோடு முரண்பட்டுள்ளனர். இந்த நேரத்தில் அதிமுக எம்எல்ஏக்களிடம் பேசினால் நம் பக்கம் வர அவர்கள் தயங்க மாட்டார்கள். செந்தில்பாலாஜிக்கு கட்சியில் பதவியும் தேர்தலில் சீட் கொடுத்து ஜெயிக்க வைத்திருப்பது அதிமுகவினருக்கு நம் மீது நல்ல நம்பிக்கை வந்திருக்கிறது. அதனால் தேவையான எம்எல்ஏக்களை நம்ம பக்கம் இழுப்பதன் முலம் இந்த ஆட்சிக்கு முடிவு கட்டலாம். நாம் அமைதியாக இருந்தால் இந்த ஆட்சி இன்னும் இரண்டு வருடத்திற்கு நீடிக்கும் என்று சீனியர்கள் ஸ்டாலினிடம் சொல்லியுள்ளனர். 
 

இதற்கு ஸ்டாலின் க்ரீன் சிக்னல் தர, அதற்கான பணிகள் நடந்து வருகிறது என்கிறார்கள் சீனியர்களுக்கு நெருக்கமானவர்கள். இந்த திட்டம் செந்தில்பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன், கே.என்.நேரு ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாம். 15 எம்எல்ஏக்கள் வரை இழுக்க முயற்சி நடக்கிறது. தற்போது வரை 7 எம்எல்ஏக்கள் திமுக வலையில் விழுந்திருக்கிறார்கள். 


இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமி உளவுத்துறை அதிகாரிகளிடம் அதிக நேரம் விவாதித்திருக்கிறார். அதன் தொடர்ச்சியாக ஆட்சியை கலைக்க திமுகவுக்கு உதவும் அதிமுக எம்எல்ஏக்கள் யார் என விசாரித்திருக்கிறார். அந்த சந்தேகப்பட்டியலில் 30 எம்எல்ஏக்கள் வந்தனர். இவர்களை கண்காணிக்கும்படி உளவுத்துறையை கண்காணிக்க உத்தரவிட்டார். மேலும் அதிமுக எம்எல்ஏக்களை இழுக்க நினைக்கும் கே.என்.நேரு, செந்தில்பாலாஜி, அனிதாராதாகிருஷ்ணன் ஆகியோரையும் கண்காணிக்க உத்தரவிட்டார்.
 

இதையடுத்துதான் அமைச்சர்கள், மா.செக்கள், எம்எல்ஏக்களுடன் தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதுகுறித்து அதிமுக தரப்பில் விசாரித்தபோது, தேர்தல் தோல்வி குறித்து அனைவரிடம் விசாரித்தார். இந்த ஆட்சியை கவிழ்க்க நினைக்கிறது திமுக. இரண்டு வருடம் ஆட்சி நீடிக்க ஒவ்வொரு எம்எல்ஏவிடமும் பேசினேன். வலிமையான கூட்டணி இருந்தும் தேர்தலில் தோல்வி ஏற்பட்டது என்று கூறியிருக்கிறார்.


 

 

பாஜகவுடன் கூட்டணி வைத்ததை பொதுமக்கள் ஏற்கவில்லை. கூட்டணி பலமாக இருந்தாலும் தோழமை கட்சிகளின் வாக்குகளே நமக்கு விழவில்லை. இந்த கூட்டணி வேண்டுமா என்று மறுபரிசீலனை செய்யுங்கள் என்று கூறினார்களாம். அதற்கு எடப்பாடி பழனிசாமி, போனது போகட்டும். அடுத்து உள்ளாட்சித் தேர்தலில்   வெற்றி பெற வேண்டும். அதற்கான பணிகளை பாருங்கள். திமுக பக்கம் யாரும் நீங்கள் போகமாட்டீங்கன்னு எனக்கு தெரியும். அவர்கள் தொடர்ந்து உங்களை அணுகுவார்கள். அந்தப் பக்கம் யாரும் சாய்ந்துவிடக்கூடாது. உங்கள் தேவைகள் நிறைவேற்றப்படும் என்று கூறியிருக்கிறார். 
 

மேலும், உளவுத்துறை கொடுத்த சந்தேகப்பட்டிலில் ஈருந்த எம்எல்ஏக்களிடம் தனியாக போனில் பேசியிருக்கிறார். அவர்களிடம் எந்த கோபத்தையும் காட்டாமல் சில உத்தரவாதத்தையும் கொடுத்திருக்கிறார். அதற்கு சில எம்எல்ஏக்கள் அவருக்கு சாதமாக பேச சற்று நிம்மதி அடைந்துள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
MLAs letter to Chief Electoral Officer Satyapratha Sahu

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்தனர். இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், பெயர்பலகைகள், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு எம்.எல்ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்ற எம்.எல்.ஏ அலுவலகங்களை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.