Skip to main content

எட்டா... பத்தா... கூட்டணி குறித்து தங்கமணி, பியுஸ் கோயல் பேச்சு வார்த்தை...

Published on 15/02/2019 | Edited on 15/02/2019

 

admk bjp




அதிமுக பாஜக கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை இன்று இரவு கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களது ஆழ்வார்பேட்டை வீட்டில் நடந்தது. இதில் அதிமுக சார்பாக அமைச்சர் தங்கமணி மற்றும் வேலுமணி மேலும் பிரபாகர் உள்ளிட்ட அக்கட்சியின் தேர்தல் கூட்டணி குழுவினர் கலந்துகொண்டனர்.
 

அதேபோல் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பொன் ராதாகிருஷ்ணன் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். இதில் கூட்டணி சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அப்போது மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தமிழ்நாட்டில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறது, இருந்தாலும் பல்வேறு கட்சிகள் கூட்டணிக்குள் வருகிறார்கள். இதனால் எங்களுக்கு 15 தொகுதிகள் அல்லது குறைந்தபட்சம் 12 தொகுதிகள் வேண்டும் என்றார். இதைக் கேட்ட அமைச்சர் தங்கமணி 15 தொகுதிகள் என்ன 20 தொகுதிகள்கூட நாங்கள் கொடுக்கத் தயார், ஆனால் நமது கூட்டணி பலமான கூட்டணியாக இருக்க வேண்டும் என்றால் தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வதுதான் சரியாக இருக்கும். ஆகவே பாஜகவுக்கு அதிகபட்சம் 8 தொகுதிகள் கொடுக்கலாம் இதுதான் எங்கள் கட்சியின் நிலைபாடு எனக் கூறியிருக்கிறார்.
 

அதற்கு பதில் கூறிய பொன். ராதாகிருஷ்ணன் 8 தொகுதிகள் சரியாக வராது 2 டிஜிட் என்ற அடிப்படையில் 10 தொகுதிகள், மேலும் பேசுங்கள் எனக் கூறியிருக்கிறார். அதற்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி தமிழ்நாட்டில் கூட்டணி அமைத்து பாஜக இதுவரை எங்கே 10 தொகுதிகளில் போட்டியிட்டது எனக் கேட்டிருக்கிறார். அதற்கு கொஞ்சம் கடுமையாக பேசிய பொன். ராதாகிருஷ்ணன் அப்படி எல்லாம் பேசக்கூடாது இப்போது நிலைமை வேறு. உங்கள் அரசாங்கம் எந்த நிலைமையில் உள்ளது என்று உங்களுக்குத் தெரியும். மத்தியிலுள்ள பிரதமர் நரேந்திர மோடி அரசு மீண்டும் நிலைக்க வேண்டும். தமிழ்நாட்டில் நீங்கள் இன்னும் இரண்டு வருடம் அரசாங்கத்தை நடத்த வேண்டும். இது எல்லாம் நாம் நடத்துகிற இந்தக் கூட்டணியில்தான் உள்ளது. இந்தக் கூட்டணி தேர்தலுக்காக மட்டும் அல்ல, எதிர்கால அரசியல் போக்கையும் கவனித்து தான் நாம் செய்கிறோம். ஆகவே தொகுதிகளைப் பற்றி எண்ணிக்கையைப் பற்றி நீங்கள் குறைத்து மதிப்பிடக்கூடாது என கூறியிருக்கிறார். 
 

அதற்கு அமைச்சர் தங்கமணி நீங்கள் கூறுவதெல்லாம் 100% உண்மை. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் என்ன மாதிரியான பிரச்சாரங்களை செய்து வருகிறது என்று உங்களுக்கு தெரியும். இந்த நிலைமையில் நீங்கள் கேட்கும் தொகுதிகளை கொடுத்தால் எவ்வளவு பெரிய பிரச்சனைகளை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று நீங்களும் உணர வேண்டும் என கூறியிருக்கிறார். அதற்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆங்கிலத்தில் பேசும்போது தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியைப் பிடிப்பதற்காக கேட்கவில்லை, தமிழ்நாட்டின் மூலமாக இங்கு அதிகமான எம்பிக்களை தேர்வு செய்ய வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். அதன் அடிப்படையில் நீங்கள் உங்கள் தலைமையிடம் பேசுங்கள் என்று கூறியிருக்கிறார். அதிமுக சார்பில் இறுதியாக 8 என்றும், பாஜக சார்பில் இறுதியாக 10 என்றும் பேச்சுவார்த்தை நடந்துள்ளது... 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story

‘எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் தான் லைட் எரிகிறது - பூத் முகவர்கள் தர்ணா

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 booth agents struggle light on the lotus will light up no matter what button is pressed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் மதியம் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்தில் லைட் எரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் 150வது வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு லைட் எரிவதாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திமுக, அதிமுக பூத் முகவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் தேர்தல் நடத்தும் அலுவலகர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.