Skip to main content

உச்சகட்டத்தில் அதிமுக - திமுக மோதல் : புதுக்கோட்டை பதற்றம்

Published on 24/09/2018 | Edited on 24/09/2018
add

 

புதுக்கோட்டையில் கடந்த ஒரு வாரமாக அதிமுக - திமுக இரு கட்சிகளின் போட்டி ஆர்ப்பாட்டங்களால் பரபரப்பாக உள்ளது. 
      அதாவது அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி புதுக்கோட்டையில் திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அமைச்சரை அவதூறாக பேசியதாக திமுகவினர் ராமலிங்கம், தென்னலூர் பழனியப்பன் மீது அதிமுகினர் கொடுத்த புகாரில் ராமலிங்கம் கைது செயயப்பட்டார். பழனியப்பனை கைது செய்யக் கோரி அதிமுக வினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.


இந்த நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தூண்டுதலில் விராலிமலையில் பழனியப்பனின் பெட்ரோல் பங்க் மீது தாக்குல் நடத்தியவர்கள் மீது நவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு 24 ந் தேி ஆர்ப்பாட்டம் நடத்த திமுக ஒ.செ. இளங்குமரன் காவல் துறையில் அனுமதி கேட்டிருந்தார். அதே நேரத்தில் திமுகவினரின் கவனத்தை திசைதிருப்பும் விராலிமலையில் திமுக வினர் கூடுவதை குறைக்கவுமாக அதிமுக தரப்பு புதுக்கோட்டையில்  ரகுபதி எம்.எல்.ஏ. வின் வீடு, கல்லூரி, திமுக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த புதுக்கோட்டை அதிமுக ந.செ. பாஸ்கர்,  மாவட்ட எஸ் பி செல்வராஜிடம் அனுமதியும் பாதுகாப்பும் கேட்டிருந்தார்.


இரு பெரும் கட்சிகளும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டால் மிகப் பெரிய மோதல்கள் உருவாகி சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளாக கருதி திமுக வினர் கேட்டிருந்த  ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் இலுப்பூர் டி எஸ் பி சரகத்திற்குள் கூட்டம் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
   ஆனால் அதிமுக தரப்பினருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.


   திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்க கோரி திமுக விராலிமலை ஒ.செ. இளங்குமரன் திங்கள் கிழமை காலை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்வதாக கூறப்படுகிறது.
  ஆனாலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக - திமுக மோதல் உச்சகட்டத்தில் உள்ளது.


  

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.