Skip to main content

மூன்றாவது திருமணம்? பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் 

Published on 21/02/2023 | Edited on 21/02/2023

 

youth was arrested in POCSO in Puducherry

 

புதுச்சேரி அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பத்தை சேர்ந்த 17 வயது சிறுமி பாவூரில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி பிளஸ் டூ படித்து வருகிறார். கடந்த 18 ஆம் தேதி பாகூர் சிவன் கோவிலில் சிவராத்திரி விழாவிற்காக சிறுமியின் குடும்பத்தினர் சென்றனர். பூஜைக்கு நேரமானதால் சிறுமியை வீட்டிற்கு அனுப்பி விட்டு பெற்றோர் மட்டும் கோவிலில் இருந்தனர். பூஜை முடிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்ற போது சிறுமி வீட்டில் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தனர். பல இடங்களில் தேடியும் கிடைக்காதால் சிறுமியை யாரேனும் கடத்திச் சென்றிருக்கலாம் என நேற்று முன்தினம் காணவில்லை என அறியாங்குப்பம் காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்திருந்தனர். மாயமான அந்த சிறுமியை அவரது குடும்பத்தினர் மற்றும் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்தனர். 

 

இதற்கிடையே நோணாங்குப்பம் பேருந்து நிறுத்தத்தில் சம்பந்தப்பட்ட சிறுமியை ஒருவர் இறக்கி விட்டுச் சென்றது தெரிய வந்தது. இதையறிந்து பெற்றோர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு அங்கு விரைந்து சென்றனர். பெற்றோரை பார்த்ததும் சிறுமி ஓடிச் சென்று பழைய பாலத்தின் மீது ஏறி ஆற்றில் குதித்திருக்கிறார். அப்போது அங்கிருந்தவர்கள்  உடனடியாக ஆற்றில் இறங்கி அந்த சிறுமியை மீட்டனர். ஆழம் குறைவு என்பதால் சிறுமியின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மயங்கிய நிலையில் அரசு பொது மருத்துவமனயில் சிறுமியை சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

 

இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் கூடுதல் உதவி ஆய்வாளர்  அன்பரசன் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிறுமியிடம் விசாரணையில் நடத்தினர். விசாரணையில் சிறுமியை கடத்தி சென்றது கடலூர் மாவட்டம் கீழ்பாதி கிராமத்தை சேர்ந்த ஏழைமுத்து மகனான தனியார் பேருந்து நடத்துநர் பாபு(29) என்பது தெரியவந்தது.  தற்போது தனியார் ஸ்போர்ட்ஸ் கடையில் வேலை பார்த்து வந்த பாபுக்கு ஏற்கனவே இருசம்பாளையத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணமாகி முதல் மனைவி மூலம் 7 வயதில் மகனும், 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர். பின்னர் முதல் மனைவியிடம் விவாகரத்தாகி இரண்டாவதாக மதுரம்பாக்கத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவரின் தவறான நடவடிக்கையால் 6 மாதங்களுக்கு முன்பு இரண்டாவது மனைவியும் பிரிந்து சென்று விட்டார். இதற்கிடையே பாபு மூன்றாவது திருமணம் செய்ய முடிவு செய்து தனியார் பேருந்தில் நடத்துநராக வேலை செய்தபோது அதே பேருந்தில் அன்றாடம் பள்ளிக்கு சென்று வரும் 17 வயது சிறுமியை நோட்டமிட்டு பழகியுள்ளார். 

 

இந்நிலையில்  கடந்த சனிக்கிழமை (சிவராத்திரி) இரவு அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி எங்கேயோ அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பாபுவிடம் வற்புறுத்தியபோது உனக்கு 18 வயதாகவில்லை வயது பூர்த்தியானதும்  திருமணம் செய்து கொள்கிறேன் என சமாதானம் செய்து பைக்கில் அழைத்து வந்து நோணாங்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகே இறக்கி விட்டுள்ளார். இது குறித்து பாபு மீது அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். பாபுவின் செல்போன் நம்பரை வைத்து இருக்கும் இடத்தை அடையாளம் கண்டனர். அபிஷேகப்பாக்கம் பகுதியில் முகாமிட்டிருந்த போலீசார் ஒரு வேனில் இருந்து பாபு இறங்கி தனது பைக்கை எடுக்க முயன்ற போது அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அர்ச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 27/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.