Skip to main content

சந்திரசூட் பரிந்துரைத்த பெயர்; உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார்?

Published on 17/10/2024 | Edited on 17/10/2024
Who will be the next Chief Justice of Supreme Court?

டெல்லியில் உள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பொறுப்பு வகித்து வருகிறார். தேர்தல் பத்திரம், சத்தீஸ்கர் மேயர் தேர்தல் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளுக்கு தீர்ப்பளித்த இவர், நவம்பர் மாதம் 10ஆம் தேதியன்று ஓய்வு பெற இருக்கிறார்.

இதனை தொடர்ந்து, அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரைக்குமாறு மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதன்படி, தன்னை தொடர்ந்து அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை நியமிக்கலாம் என மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் பரிந்துரை செய்துள்ளார். 

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முறைப்படி செய்த பரிந்துரைக்கு, மத்திய அரசு ஒப்புதல் தரும் பட்சத்தில், சஞ்சீவ் கண்ணா உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பார். உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பொறுப்பேற்கும் பட்சத்தில், அவர் அடுத்த ஆண்டு மே 13ஆம் தேதி வரை பதவியேற்பார் என்று கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்