Skip to main content

காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நூதன தண்டனை கொடுத்த கிராம மக்கள்!!

Published on 22/09/2021 | Edited on 22/09/2021

 

jl

 

மத்தியப் பிரதேசத்தில் காதல் திருமணம் செய்த ஜோடியைக் கிராம மக்கள் கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் குந்தி கிராமத்தில் வீட்டிற்குத் தெரியாமல் இளம் ஜோடி ஒன்று சில நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளனர். வீட்டில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையிலும் அதையும் மீறி இருவரும் திருமணம் செய்துள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த அந்த கிராம மக்கள் அவர்களைத் தீவிரமாகத் தேடியுள்ளனர்.

 

அவர்களின் தோழியுடன் அவர்கள் இருவரும் தொலைப்பேசியில் பேசியுள்ளதைக் கண்டுபிடித்த கிராம மக்கள் அவர்களைக் கண்டுபிடித்து கிராமத்திற்கு அழைத்து வந்துள்ளனர். தாங்கள் எவ்வளவு சொல்லியும் எதற்காகத் திருமணம் செய்தீர்கள், உங்களுக்கு அவ்வளவு துணிச்சல் வந்துவிட்டதா? என்று ஊர்பெரியவர்கள் சிலர் அவர்களிடம் ஆவேசமாகப் பேசியுள்ளனர். அப்போது சிலர் அவர்களின் தலையில் கார் டயர்களை மாட்டி நடனம் ஆடச் சொல்லியுள்ளனர். அவர்களும் மிரட்டலுக்குப் பணிந்து டயருடன் நடனமாடியுள்ளனர். இந்த சம்பவம் வைரலான நிலையில் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்