Skip to main content

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இன்று தமிழகம் வருகை

Published on 03/08/2017 | Edited on 03/08/2017
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட
மீனவர்கள் இன்று தமிழகம் வருகை


இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 77 தமிழக மீனவர்கள் இன்று மாலை தமிழகம் வந்தடைவர் என கூறப்படுகிறது.

இலங்கை சிறையில் இருந்த 92 தமிழக மீனவர்களில் 77 மீனவர்கள், நல்லெண்ண அடிப்படையில், ஜூலை 25ம் தேதி விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 77 பேரும், இன்று காலை இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்படுகின்றனர்.

ஒப்படைக்கப்படும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை மீனவர்கள் பின்னர் இன்று மாலை காரைக்கால் வர உள்ளனர்.

சார்ந்த செய்திகள்