Skip to main content

எலி உடலில் முளைத்த சோயாபீன்ஸ் செடி- வினோத வீடியோ!!

Published on 14/08/2018 | Edited on 14/08/2018

  

RAT

 

 

 

அறிவியல் அதிசயங்கள் என்பது சில நேரங்களில் நம்ப முடியாத அளவிற்கு மனிதர்களையே திகைக்கவைத்து விடுகிறது. அதன் அடிப்படையில் சில தனித்துவம் வாய்ந்த அதிசய நிகழ்வுகளை கேள்விப்படும்பொழுது  நம்பலாமா? வேண்டாமா?  என்ற எண்ணத்தையே உருவாகிவிடுகிறது. அப்படி ஒரு நிகழ்வுதான் நடத்துள்ளது மத்தியபிரதேசத்தில். மத்தியப்பிரதேசம் மாநிலம் ரத்லம் பகுதியை சேர்ந்த தாதர் சிங், தனக்கு சொந்தமான இடத்தில் சோயா பீன்ஸை சமீபத்தில் விதைத்துள்ளார்.

 

 

கடந்த சில நாட்களுக்கு பிறகு தனது தோட்டத்தை பார்வையிட சென்ற அவர் அங்கு ஒரு எலி உடலில் பீன்ஸ் செடி ஒன்று முளைத்தபடி அங்கும் இங்கும் ஓடியதைக் கண்டார். அவர் அந்த எலியை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். பிறகு அந்த எலியை பிடித்து அதன் கழுத்து பகுதியில் வளர்ந்திருந்த பீன்ஸ் செடியை பிடுங்கியுள்ளார். இந்த அதிசயம்பற்றி கல்லூரி உயிரியல் தலைவர் ஒருவர் கூறுகையில் கழுத்தில் காயம் ஏற்பட்டபொழுது விதை அங்கு விழுந்திருக்கும் அதனால் இப்படி செடி வளர்ந்திருக்கலாம் என்றும் கழுத்து பகுதியில் செடி வளர்ந்திருந்தாலும் அதனால் பாதிக்கப்பட்ட எலியின் மூளையில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

Published on 02/08/2022 | Edited on 02/08/2022

 

Admission date notification for arts and science colleges!

 

கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதியைக் கல்லூரி கல்வி  இயக்ககம் அறிவித்துள்ளது.

 

தமிழகத்தில் வரும் கல்வியாண்டிற்கான கலை, அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 5 தேதி முதல் தொடங்கும் எனக் கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் வரும் ஆகஸ்ட் 5 முதல் கலந்தாய்வு தொடங்க உள்ளது. 12 ஆம் வகுப்பில் எடுக்கப்பட்ட மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும். 163 கலை, அரசு அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1.3 லட்சம் இடங்களில் சேர 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில் ,சில நாட்களுக்கு முன்பு தரவரிசை பட்டியல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அதிலும் இந்த கலந்தாய்வு ஆன்லைன் முறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

இரண்டு கருந்துளைகள் இணையும் அற்புத நிகழ்வு - படங்களை வெளியிட்ட நாசா!

Published on 14/12/2020 | Edited on 14/12/2020

 

nasa black holes merging

 

அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, விண்வெளி தொடர்பான முக்கியமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், அவ்வப்போது வானில் நடக்கும் அற்புத நிகழ்வுகளையும் படம் பிடித்து வெளியிட்டுவருகிறது.

 

அந்தவரிசையில் தற்போது இரண்டு மிகப்பெரும் கருந்துளைகள் இணையும் நிகழ்வைப் படம்பிடித்து, நாசாவின் சந்திரா எக்ஸ் - ரே கண்காணிப்பகம், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

 

இந்தப் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நாசா, 'என்.ஜி.சி 6240' என்ற பால்வெளியில், இரண்டு மிகப்பெரும் கருந்துளைகள் இணையும் நிலையில் இருக்கின்றன. இந்த இரண்டு கருந்துளைகளும் 3,000 ஒளியாண்டு இடைவெளியில் இருக்கின்றன. இவையிரண்டும் ஒன்றாக இணைந்து, ஒரு மிகப்பெரிய கருந்துளையை உருவாக்கப் போகின்றன. அது இன்றிலிருந்து பல கோடி ஆண்டுகளுக்கு, மிகப்பெரிய கருந்துளையாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

 

நாசா வெளியிட்ட இந்தப் புகைப்படத்தை மக்கள் ஆச்சரியத்தோடு பார்த்து வியந்து வருகின்றனர். மேலும், இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.