பம்பர் லாட்டரி குலுக்கலில்
ஆட்டோ டிரைவருக்கு 10 கோடி பரிசு
கேரளாவின் முக்கிய பண்டிகையான ஓணத்தையொட்டி ரூ.10 கோடி முதல் பரிசாக கொண்ட ஓணம் பம்பர் சிறப்பு லாட்டரியை கேரள அரசு அறிவித்தது. இரண்டு தினங்களுக்கு முன்பே இந்த லாட்டரி முடிவுகள் வெளியிடப்பட்டாலும் முதல் பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலி யார் என்பது தெரியாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் முதல் பரிசான ரூ.10 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி யார் என்று தெரியவந்துள்ளது. அவரது பெயர் முஸ்தபா (வயது 48). மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடியை சேர்ந்த இவர் லோடு ஆட்டோ டிரை வராக உள்ளார். இவரது தந்தை தேங்காய் வியாபாரம் செய்து வருவதால் தந்தைக்கு உதவியாக தேங்காய்களை ஆட்டோ மூலம் கடைகளுக்கு எடுத்துச்சென்று சப்ளை செய்து வருகிறார்.